search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண் பட்ஜெட்: கன்னியாகுமரியில் முல்லைப்பூங்கா - தஞ்சாவூரில் மருதம் பூங்கா அமைக்கப்படும்
    X

    வேளாண் பட்ஜெட்: கன்னியாகுமரியில் முல்லைப்பூங்கா - தஞ்சாவூரில் மருதம் பூங்கா அமைக்கப்படும்

    • 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
    • விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.

    * நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பரிசளிக்க ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் விவசாயிகளுக்கு பரிசு.

    * மாற்றுப்பயிர் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட ரூ.12 கோடி மானியம்.

    * 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2,482 ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் உருவாக்கிட ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு.

    * பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

    * விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு.

    * விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.

    * புதிய கரும்பு ரக விதைகளை மானியத்தில் வழங்கிட ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் உயர்த்த ரூ.12.40 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.

    * கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் முல்லைப்பூங்கா அமைக்கப்படும்.

    * தஞ்சாவூரில் 2 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×