என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி: சட்டசபையில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
    • மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது தி.மு.க.

    * அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது தமிழ்நாடு.

    * நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் உள்ளது.

    * அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.

    * அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும்.

    * மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளை கடந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    * மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.

    * மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.

    * அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×