என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
- மக்கள் மீது வரிச்சுமை அதிகமானதை தவிர வேறு எந்த சாதனையும் இல்லை.
- நிதி பற்றாக்குறை அதிகரித்தால் மக்களின் தலையில் வரிச்சுமை கூடும்.
சென்னை :
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டிவதைத்த ஏமாற்று மாடல் திமுக அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
* திமுக அரசு எந்த அளவிற்கு தமிழக மக்களுக்கு காது குத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவே பத்திரிகை வெளியிட்டோம்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காமல் திமுக அரசு ஏமாற்றி உள்ளது.
* பல்வேறு துறைகளில் உள்ள அலுவலர்களுக்கு திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
* வாய்ஜாலம் நிறைந்த மேனாமினிக்கி உரை போல் தான் இடைக்கால பட்ஜெட் உரை உள்ளது.
* திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது.
* சுமார் ரூ.26,000 கோடி அளவுக்கு மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது.
* மாநில சொந்தவரி வருவாய் குறைந்தது குறித்து சட்டசபையில் இன்று எந்த விளக்கத்தையும் நிதியமைச்சர் கூறவில்லை.
* நிதி நிர்வாக திறனற்ற திமுக அரசால் மக்கள் மீது மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது.
* நிதி பற்றாக்குறையை குறைக்க மக்கள் மீது வரி சுமையை ஏத்துவதும் கடன் வாங்குவதும் நல்லதல்ல.
* மக்கள் மீது வரிச்சுமை அதிகமானதை தவிர வேறு எந்த சாதனையும் இல்லை.
* நிதி பற்றாக்குறை அதிகரித்தால் மக்களின் தலையில் வரிச்சுமை கூடும்.
* அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும், புட்டு பார்த்தால் சொத்தையாக இருக்கும் அதுதான் இன்றைய பட்ஜெட்.
* ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடக்கும் என்று கூறினார்கள் மொத்தமாகவே 140 நாள் தான் நடத்தினார்கள்.
* வேளாண்துறையில் நீர்வளத்துறையை சேர்த்தது ஏன்? வேளாண் பட்ஜெட் ஒரு ஏமாற்று பட்ஜெட்.
* கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றார்.






