search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people arrested for"

    • கொரமடை கடத்தூர் கொரங்காட்டு தோட்டம் பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொரமடை கடத்தூர், கொரங்காட்டு தோட்டம், பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் நம்பியூரை சேர்ந்த மணிகண்டன் (24), எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (22), மதன்குமார் (25), கோகுல் (22), கடத்தூரை சேர்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், பணம் ரூ.950 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×