search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Concession"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலங்களை பறிக்கும் செயலில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டிருக்கிறது.
    • கோவில் நில குத்தகை உழவர்களை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான நன்செய் நிலங்களில் விவசாயம் செய்து வரும் உழவர்கள், சில ஆண்டுகளாக குத்தகை நெல்லை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதைக் காரணம் காட்டி, அந்த நிலங்களை பறிக்கும் செயலில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டிருக்கிறது.

    உழவர்களின் சூழலைப் புரிந்து அவர்களுக்கு உதவாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது கண்டிக்கத்தக்கது. கோவில் நில குத்தகை உழவர்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு குத்தகை நெல் பாக்கி தொடர்பான வழக்குகளில் இருந்து விடுவிக்கவும், குவிந்து கிடக்கும் குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதன் மூலம் கோவில் நில குத்தகை உழவர்களை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து விரைவு ரெயில்களும் பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால், மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ரெயில்வே அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் அசோக்குமார் எம்.எல்.ஏ., நகர வர்த்தகர் கழகம், ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம், பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அதில் கூறியிரு ப்பதாவது:-

    காரைக்குடியில் இருந்து பேராவூரணி வழியாக இரு முனைகளில் இருந்தும் சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும். காரைக்குடி -திருவாரூர் பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். இதே வழித்தடத்தில் இரவு நேர கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வந்த ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

    இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.

    பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். முன்பதிவு மையத்தை தொடங்க வேண்டும்.

    மூத்த குடிமக்களுக்கு பயண கட்டண சலுகை வழங்க வேண்டும் இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியின் போது பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், முன்னாள் வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், ரயில் பயனாளிகள் சங்க தலைவர் மெய்ஞானமூர்த்தி, பாரதி நடராஜன், வர்த்தகர் கழக கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் கந்தப்பன், அப்துல் மஜீது, அபிராமி சுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது.
    • மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    புது டெல்லி:

    இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டபோது அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

    பின் ரெயில் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் ரயில் பயணத்தில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என ரெயில்வே அமைச்சகம் இணையத்தில் மறுத்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×