என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியல் வெளியீடு"

    • புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் சர்ச்சைகள் எழுந்தது.
    • 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் படாது என்று கூறப்படுகிறது.

    தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களைத் தவிர மொத்தம் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

    இவர்களில் 6 பேர் மட்டும் ஏற்கனவே மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் சர்ச்சைகள் எழுந்தது.

    இது பற்றி மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூறும் போது, 'புதியதாக நியமிக்கப்பட்டு உள்ள மாவட்ட தலைவர்களின் பணிகள் 6 மாதம் கண்காணிக்கப்படும். திருப்தி இல்லை என்றால் அவர்கள் மாற்றப்படுவார்கள்' என்றார்.

    இந்தநிலையில் தற்போது புதிதாக மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமனமும் நடைபெற உள்ளது. மாநில நிர்வாகிகளை பொறுத்த வரை துணை தலைவர்கள், பொதுச் செயலாளர், செயலாளர்கள் உள்பட சுமார் 200 பேர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

    புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வாரத்திற்குள் இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு மேலிட ஒப்புதலுடன் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் அனைத்து பொறுப்புகளிலும் நிர்வாகிகளை நியமித்து தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்த தமிழக காங்கிரசார் திட்டமிட்டு உள்ளார்கள். புதிதாக 150 பேருக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    ஏற்கனவே மாவட்ட தலைவர்களாக இருந்து அனுபவம் மிக்கவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்களுக்கு மாநில நிர்வாக பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் மாவட்ட தலைவர் பதவியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர்கள் மட்டும் மாநில நிர்வாகிகளாகவும் நியமிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

    • புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.
    • கிழக்கு தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் புதிய வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.அதனை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை வெளியிட்டார்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 12 லட்சத்து 96 ஆயிரத்து 75 ஆண்களும், 13 லட்சத்து 38 ஆயிரத்து 950 பெண்களும், 213 திருநங்கைகளும் உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 26 லட்சத்து 35 ஆயிரத்து 238 வாக்காளர்கள் உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியில் குறைந்தபட்சமாக 2 லட்சத்து 15 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 778 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 708 பேர் பெண்கள், 14 பேர் திருநங்கைகள்.

    மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு தொகுதியில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 222 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 89 பேர் ஆண்கள். ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 871 பேர் பெண்கள். 62 பேர் திருநங்கைகள்.

    மேலூர் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 82 ஆண்களும், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 114 பெண்களும், 3 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 39 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர்.

    மதுரை வடக்கு தொகுதியில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 841 ஆண்களும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 470 பெண்களும், 43 திருநங்கைகளும், ஆக மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 354 பேர் உள்ளனர்.

    மதுரை தெற்கு தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 508 ஆண்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 79 பெண்களும், 24 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 24 ஆயிரத்து 611 வாக்காளர்கள் உள்ளனர்.

    மதுரை மத்திய தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 601 ஆண்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 870 பெண்களும், 18 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 30 ஆயிரத்து 489 வாக்காளர்கள் உள்ளனர்.

    மதுரை மேற்கு தொகுதி யில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 649 ஆண்களும், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 445 பெண்களும், 5 திருநங்கைகள் உள்பட 3 லட்சத்து 1099 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 421 ஆண்களும், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 133 பெண்களும், 34 திருநங்கைகள் உட்பட 3 லட்சத்து 13 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருமங்கலம் தொகுதியில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 742 ஆண்களும், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 186 பெண்களும், 8 திருநங்கைகளும் உள்பட 2 லட்சத்து 70 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர்.

    உசிலம்பட்டி தொகுதியில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 364 ஆண்களும், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 74 பெண்களும், 2 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 74 ஆயிரத்து 440 வாக்காளர்கள் உள்ளனர்.

    • கரூர்- செந்தில்நாதன், சேலம் தெற்கு- ஹரி ராமன், தருமபுரி- சரவணன் உள்ளிட்டோர் நியமனம்.
    • திருப்பூர் தெற்கு- மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில் நியமனம்..

    தமிழக பாஜகவில் புதிய மாவட்ட தலைவர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, கரூர்- செந்தில்நாதன், சேலம் தெற்கு- ஹரி ராமன், தருமபுரி- சரவணன், திருப்பூர் வடக்கு- கேசிஎம்பி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல் மேற்கு- ஜெயராமன், திருவண்ணாமலை வடக்கு- கவிதா, ராணிப்பேட்டை- நெமிலி ஆனந்தன், கிருஷ்ணகிரி மேற்கு- நாராயணன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மேற்கு- ராமச்சந்திரன், திருப்பூர் தெற்கு- மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மறுசீரமைக்கப்பட்ட வாக்குசாவடிகளின் பட்டியலை ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டார்.
    • வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் 303 வாக்குச் வாக்குச்சாவடிகளும், திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச் வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச் வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 385 வாக்குச் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1370 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

    1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிக்கவும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர்கள் கார்த்திகேயன் (தேர்தல்), முருகேசன (ராமநாதபுரம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×