search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 state assembly elections"

    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பா.ஜனதா மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    இந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4½ மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. கட்சி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்காக புதுமுகம் அவசியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனால் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்யப் படலாம் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் மேலிடம் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது.

    • இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா?
    • வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் மோடியின் கனவு கேள்விக்குறியாகவே இருக்க முடியும். ஆனால், அதற்குள்ளாக சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது.

    விநியோகம் அல்லது சமத்துவமற்ற குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும். இந்த குறியீடு 0-100 என உலகப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனா மற்றும் ஜப்பானின் மதிப்பு 50 க்கும் மேல் உள்ளது. ஆனால், 21.9 மதிப்பு உள்ள இந்தியாவை விடப் பல மடங்கு அதிகமாக இந்த நாடுகளின் பொருளாதார பங்களிப்பு உள்ளது.

    5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா? பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலேயே மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. மோடி ஆட்சி என்பது யாருக்காக நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேநேரத்தில் வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிரமாக போராடி வருகிறது
    • சிலிண்டருக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படும் என்றார் பிரியங்கா

    இந்தியாவில் 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம் இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த 5 மாநில தேர்தல்களை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. இதன் காரணமாக 5 மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய தேசிய கட்சிகளும், அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள பிராந்திய கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

    இந்த 5 மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜல்பந்தா பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    மதத்தின் பெயரால் உங்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களுக்கு (பா.ஜ.க.) வாக்களிப்பீர்களா அல்லது உங்கள் நல்வாழ்வுக்காக பாடுபடும் கட்சிக்கு (காங்கிரஸ்) வாக்களிப்பீர்களா? மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள சுமார் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் சுவாமி ஆத்மானந்த் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். பொதுமக்களுக்கு 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். சமையல் எரிவாயு தொகையில் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சாலை விபத்தில் சிக்கும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    முன்னதாக சத்தீஸ்கரில் பிரியங்கா காந்தியின் சகோதரரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியும் தனது பிரச்சாரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநிலங்களில் இவ்வருட இறுதிக்குள் சட்டசபை காலம் நிறைவடைகிறது
    • 5 மாநிலங்களிலும் மொத்தம் 16.1 கோடி வாக்காளர்கள் உள்ளனர்

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

    அந்த 5 மாநிலங்களில் நடைபெற வேண்டிய 2023க்கான சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பதிலிருந்து கட்டமைப்பு வசதிகளின் தேவை உள்ளிட்ட முக்கிய ஏற்பாடுகளை செய்வது வரை தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    அதே நேரம் இம்மாநிலங்களில் தேர்தலை எதிர்நோக்கியுள்ள கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.

    தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

    இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இதனை வெளியிட்டார். தேர்தலை அமைதியாக நடத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இம்முறை சத்தீஸ்கரில் மட்டும் 2 கட்டங்களாகவும் பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

    5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8.2 கோடி பேர் ஆண் வாக்காளர்கள்; 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.

    மொத்தம் 1.79 லட்சம் வாக்கு சாவடிகள் அமைய உள்ளன. இவற்றில் 1 கோடியே 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை நேரில் கண்காணிக்க "வெப் கேமிரா" (web camera) அமைக்கப்பட உள்ளது.

    மிசோரமில் நவம்பர் 7-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். மிசோரத்தில் வருகிற 13-ந்தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும். அன்றே மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.

    சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டத்துக்கான தேர்தல் அறிக்கை வருகிற 13-ஆம்தேதியும், இரண்டாம் கட்டத்துக்கான தேர்தல் அறிகை 21-ஆம் தேதியும் வெளியிடப்படும்.

    மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 அன்று தேர்தல் நடைபெறும். வருகிற 21-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். 30-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும்.

    ராஜஸ்தானில் நவம்பர் 23 அன்று  தேர்தல் நடைபெறும். வருகிற 30-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 6 வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.

    தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

    ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ஆம் தேதி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்..

    5 மாநிலங்களிலும் உள்ள தற்போதைய சட்டசபை நிலவரம்:

    தெலுங்கானா - மொத்த இடங்கள்: 119 - ஆளும் கட்சி: பாரத் ராஷ்ட்ரிய சமிதி

    மத்திய பிரதேசம் - மொத்த இடங்கள்: 230 - ஆளும் கட்சி: பா.ஜ.க.

    சத்தீஸ்கர் - மொத்த இடங்கள்: 90 - ஆளும் கட்சி: காங்கிரஸ்

    ராஜஸ்தான் - மொத்த இடங்கள்: 200 - ஆளும் கட்சி: காங்கிரஸ்

    மிசோரம் - மொத்த இடங்கள்: 40 - ஆளும் கட்சி: மிசோ தேசிய முன்னணி

    இம்முறை ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா தீவிரமாக உள்ளது. அதே போல் மத்திய பிரதேசத்தை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

    ஐந்து  மாநில தேர்தல்கள் முடிந்த 4 மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக 5 மாநில தேர்தல் முடிவை நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். #2018electionresults #Rajinikanth
    சென்னை:

    வெளியூர் செல்வதற்காக இன்று மாலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்த செய்தியாளர்கள்  5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவரது கருத்தை அறிய முயன்றனர்.



    அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக தெரிவித்தார். இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #2018electionresults #Rajinikanth
    ×