என் மலர்
நீங்கள் தேடியது "Raghav Chadha"
- ராகவ் சதா- நடிகை பரினீதி சோப்ரா கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
- இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை பிறந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
பரினீதி சோப்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில் "இப்போ அவன் வந்துட்டான்! எங்களுடைய பையன்.
முன்பு வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் நினைவில் கொள்ளவே முடியாது! கைகள் நிரம்பியுள்ளன, எங்களுடைய இதயங்கள் நிறைந்துள்ளன. முதலில் நாங்கள் ஒருவருக்கொருவதாக இருந்தோம். இப்போது எங்களுக்கு எல்லாம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
- சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
- INDIA என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான்- பொன்முடி
சானதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக உள்ளது. இதில் உள்ள மற்ற பெரும்பாலான கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ராகவ் சதா இதுகுறித்து கூறியதாவது:-
நான் சனாதனத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற எதிர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் எதிர்க்கிறேன். இதுபோன்ற கருத்துகளை கூறக் கூடாது. எந்தவொரு மதத்திற்கு எதிராகவும், இதுபோன்ற கருத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அனைத்து மதத்திற்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.
சில கட்சிகளில் இருந்து சில தலைவர்கள் இதுபோன்று கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது INDIA கூட்டணியின் கருத்து என்று அர்த்தம் இல்லை. நாடு எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றிற்கு எதிராக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து மாநிலத்தின் மாவட்டத்தில் இருந்து சிறிய தலைவரால் உருவானது. இது கூட்டணியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது.
இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.
திமுக அமைச்சர் பொன்முடி, இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் எனப் பேசிய வீடியோவை நேற்று பா.ஜனதா வெளியிட்டுள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது.
- கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது.
இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் தேர்வு தொடர்பான மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்த நிலையிலும் மத்திய அரசு இந்த மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறுகையில் "அரசு பில்டோசர் மூலம் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. அங்கே சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் இல்லை என்றால் எப்படி சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் இருக்க முடியும்.
நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது. கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது. நாங்கள் இதுகுறித்து எங்களுக்குள் ஆலோசனை நடத்தி, சட்டப்பூர்வ ஆலோசனைகள் பெறுவோம். அதன்பின் உச்சநீதிமன்றத்தில முறையீடு செய்வோம்" என்றார்.
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான 5 பேர் கொண்ட தேர்வு குழுவை தேர்ந்தெடுக்க மத்திய சட்ட மந்திரி தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிலாக மந்திரிசபை செயலாளர் இடம் பிடிப்பார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






