search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் முறைகேடு புகார் அளிக்க சி-விஜில் செயலி: தலைமை தேர்தல் ஆணையர்
    X

    தேர்தல் முறைகேடு புகார் அளிக்க சி-விஜில் செயலி: தலைமை தேர்தல் ஆணையர்

    • வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது.
    • ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தமிழகம் வந்த அதிகாரிகள் குழு சென்னையில் 2 நாட்களாக ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    *2 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம்.

    * வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும்.

    * அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

    * நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளோம்.

    * பணப்பட்டுவாடாவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதை பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்.

    * தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.19 கோடி. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆண்கள் - 3.04 கோடி, பெண்கள் - 3.15 கோடி, மூன்றாம் பாலினம் - 8,294 வாக்காளர்கள் உள்ளனர்.

    * தமிழகத்தில் புதிய வாக்காளர் 9.18 லட்சம் பேர் உள்ளனர்.

    * வாக்கு சாவடியில் 66% வெப் காஸ்டிங் செய்யப்படும்.

    * வாக்குச்சாவடி மையங்களில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தப்படும்.

    * வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது. சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். சி-விஜில் செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஜனநாயக முறையில் வெளிப்படையாக தேர்தலை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    * எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

    * 17 மாவட்டங்களில் உள்ள 145 எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    * பணப்பட்டுவாடா, மது விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

    * தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    * ஒரு வங்கி கணக்கில் இருந்து பலருக்கு பணம் பட்டுவாடா செய்தால் அதை கண்காணிக்கும் வசதி உள்ளது.

    * அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கிய சின்னமே, இந்த முறையும் வழங்கப்படும் என உறுதி அளிக்க முடியாது.

    * EVM கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    * எந்த புதிய முறையும் பாராளுமன்ற தேர்தலில் கொண்டு வரவில்லை. பழைய முறை தான், ஆனால் நவீன தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கிறோம்.

    * சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×