என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்னை வருகை
- சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
- முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தை சந்திக்க இருக்கிறார்.
இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்துள்ள ஜே.பி. நட்டாவை பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.
சென்னை வந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ட்ரல் அருகே நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வத்தையும் ஜே.பி. நட்டா சந்திக்க இருக்கிறார். இந்த பயணத்தின் போதே பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வியூகம் பற்றிய ஆலோசனை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.






