search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Centenary"

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்று திரும்பியபோது விபத்தில் இறந்ததால் அதிமுக சார்பில் 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம், ஆம்பலாப்பட்டு தெற்குத் தெரு கிளைக் கழகப் பொருளாளர் சுந்தர பாண்டியன், மதுக்கூர் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு சேகர் ஆகியோர், நேற்று சென்னையில் நடைபெற்ற, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாளை எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். #MGRCentenary #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி 31 மாவட்டங்களில் மிக சிறப்பாக நடைபெற்றது.



    சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 3.30 மணியளவில் சிறப்பாக நடைபெற உள்ளது.

    விழாவில், எம்.ஜி.ஆரின் உருவப் படத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டும், எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தா, உரையாடல் ஆசிரியர்கள், நடனக் கலைஞர்கள், படத்தொகுப்பாளர்கள், சண்டைப் பயிற்சியாளர், ஒப்பனைக் கலைஞர், புகைப்படக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரை கவுரவிக்கிறார்.

    எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டும், தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து, காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை வகிக்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார்.

    விழாவையொட்டி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் மக்களுக்கு ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங்கள், மக்கள் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியும் தமிழ்நாடு அரசின் சாதனைகள், திட்டங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 31 அரசு துறைகள் பங்கேற்கும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில் அமைச்சர்கள் துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலாளர் இரா.வெங்கடேசன் நன்றியுரை ஆற்றுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MGRCentenary #EdappadiPalaniswami

    சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. #ADMK
    சென்னை:

    சென்னையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற 22-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது.

    அ.தி.மு.க. அமைச்சர்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சி பதவிகளை வைத்துள்ளதால் அந்த பதவிகளை பிரித்து பதவி இல்லாத முக்கிய நிர்வாகிகளுக்கு வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    கடந்த வாரம் அ.தி.மு.க.வில் பல்வேறு நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் இன்னும் ஏராளமான எம்.பி., எம்.எல். ஏ.க்கள் கட்சி பொறுப்பு இல்லாமல் உள்ளதாகவும் அப்படிப்பட்ட நிர்வாகிகளுக்கும் கட்சி பொறுப்பு வழங்குவது குறித்து கூட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் பேசுவோம் என்று மாவட்டச் செயலாளர் ஒருவர் தெரிவித்தார்.

    கட்சியில் மாவட்டச் செயலாளர்களுக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அ.தி.மு.க. விழாக்களும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு போதிய கூட்டம் வருவதில்லை என்ற குறைபாடு தற்போது மேலோங்கி உள்ளது.

    இதை சரிசெய்வதற்கான வழிவகை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட கூடும் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டின் நிறைவு விழாவை அடுத்த மாதம் 30-ந்தேதி அன்று சென்னையில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. #TNGovt #MGRCentenary #MGR100
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது குமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-


    முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட முடிவு செய்யப்பட்டு விழா நடத்தப்பட்டது.

    நிர்வாக காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் விழா நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 22.9.2018 அன்று நடத்தவும் நிறைவு விழாவை அடுத்த மாதம் 30-ந்தேதி அன்று சென்னையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovt #MGRCentenary #MGR100
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார்.

    இந்த நிலையில், 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, இதுவரை மொத்தம் 47 பேர் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 15 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

    சென்னையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அயூப்கான் கூறுகையில்:-

    தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகள் சுமார் 1500 பேர் உள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இருவரை 500 பேர் விடுதலை செய்துள்ளனர். மீதமுள்ள ஆயிரம் பேர் தங்களை எப்போது விடுதலை செய்வார்களோ என்ற மனஉளைச்சலில் கைதிகளும் அவர்களது குடும்பத்தாரும் தினமும் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களையும் விரைவில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவிற்கு பிறகு இப்போது தான் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.

    ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.

    ஆண்டுதோறும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் கைதிகள் விடுதலையை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் 8 மாதம் கழித்து தான் தாமதமாக நாங்கள் விடுதலையாகி உள்ளோம் என்றார். #MGRCentenary
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து 16 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary #TNGovernment
    மதுரை:

    தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டங்கள்தோறும் கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ள கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இதன்பேரில் தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 16 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைவாசலில் உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். #MGRCentenary #TNGovernment
    ×