என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் ஜெயில் கைதிகள் மேலும் 15 பேர் விடுதலை
Byமாலை மலர்25 Aug 2018 6:34 AM GMT (Updated: 25 Aug 2018 6:34 AM GMT)
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary
வேலூர்:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார்.
இந்த நிலையில், 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, இதுவரை மொத்தம் 47 பேர் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 15 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
சென்னையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அயூப்கான் கூறுகையில்:-
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகள் சுமார் 1500 பேர் உள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இருவரை 500 பேர் விடுதலை செய்துள்ளனர். மீதமுள்ள ஆயிரம் பேர் தங்களை எப்போது விடுதலை செய்வார்களோ என்ற மனஉளைச்சலில் கைதிகளும் அவர்களது குடும்பத்தாரும் தினமும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களையும் விரைவில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவிற்கு பிறகு இப்போது தான் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.
ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.
ஆண்டுதோறும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் கைதிகள் விடுதலையை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் 8 மாதம் கழித்து தான் தாமதமாக நாங்கள் விடுதலையாகி உள்ளோம் என்றார். #MGRCentenary
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார்.
இந்த நிலையில், 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, இதுவரை மொத்தம் 47 பேர் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 15 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
சென்னையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அயூப்கான் கூறுகையில்:-
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகள் சுமார் 1500 பேர் உள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இருவரை 500 பேர் விடுதலை செய்துள்ளனர். மீதமுள்ள ஆயிரம் பேர் தங்களை எப்போது விடுதலை செய்வார்களோ என்ற மனஉளைச்சலில் கைதிகளும் அவர்களது குடும்பத்தாரும் தினமும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களையும் விரைவில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவிற்கு பிறகு இப்போது தான் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.
ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.
ஆண்டுதோறும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் கைதிகள் விடுதலையை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் 8 மாதம் கழித்து தான் தாமதமாக நாங்கள் விடுதலையாகி உள்ளோம் என்றார். #MGRCentenary
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X