search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoners release"

    வேலூர் ஜெயிலில் இருந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று ஆண்கள் ஜெயிலில் இருந்து 12 பேர், பெண்கள் ஜெயிலில் இருந்து 2 பேர் என மொத்தம் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

    ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள 18 தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    கோவை:

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தண்டனை கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய அரசு முடிவெடுத்தது.

    இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை 6 மணியளவில் கோவை மத்திய சிறையில் உள்ள 18 தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
    மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று ஆயுள் தண்டனை கைதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    மதுரை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதில் 12-வது கட்டமாக மதுரை சிறையில் இருந்து குமரேசன், கருப்பையா, பெருமாள், சுப்பிரமணியன், பிச்சை, கனி ராஜா, பஞ்சராசு, நடேசன், மாதவன் ஆகிய 8 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுவரை மதுரை மத்திய சிறையில் இருந்து 221 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து இன்று 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

    ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
    மதுரை ஜெயிலில் இருந்து 11 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

    இதனையடுத்து மாநிலம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து கைதிகள், பல்வேறு கட்டங்களாக நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் முருகன், கணேஷ்பாபு, கருப்பசாமி, பிரபு கண்ணன், ஆனந்தராஜ், ஆண்டிசாமி, சரவணன், ஜெயபால், ராஜா, ராஜசேகரன், பொன்வேல் ஆகிய 11 கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

    மதுரை ஜெயிலில் இருந்து இதுவரை 11 கட்டங்களாக 213 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    கொண்டலாம்பட்டி:

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிறந்த நாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா சென்னையில் நடக்கிறது.

    இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சேலம் மத்திய ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விபரம் வருமாறு:-

    1.அய்யனார்
    2.செல்வம்
    3.ஈஸ்வரன்
    4.சேகர்
    5.மாது
    6.மணிகண்டன்
    7.சின்னதுரை
    8.சுந்தரம்
    9.அய்யனார்
    10.வரதராஜன்
    11.ஜோசு ஆசீர் சிங்
    12.ரவி என்கிற ரவிக்குமார்
    13.சுபாஷ்
    14.பிரகாஷ்
    15.சண்முகம்
    16.சின்னதம்பி
    17.விஜயசங்கர்
    18.நடேசன்
    19.குப்புசாமி
    20.பத்மநாபன்
    21.பெரியண்ணன்
    22.புதராசு
    23.மண்ணாதன்
    24.மணியசாகம்
    25.அண்ணாமலை
    26.ராஜூ
    27.பெரியண்ணன்
    28.மாது
    29.அபிமன்யூ
    30.திம்மராயன்
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து 16 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary #TNGovernment
    மதுரை:

    தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டங்கள்தோறும் கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ள கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இதன்பேரில் தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 16 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைவாசலில் உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். #MGRCentenary #TNGovernment
    ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடும் வகையில் கல்வீச்சு போன்ற சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். #JKgovt #115prisonersrelease
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது, தடையை மீறி பேரணி சென்றது போன்ற வழக்குகளில் கைதானவர்களை ரம்ஜான் பண்டிகைக்குள் விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதையடுத்து, கொடுங்குற்றம் அல்லாத சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். #JKgovt  #115prisonersrelease
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 கைதிகள் இன்று விடுதலையானார்கள். #MGRCentenary
    செங்குன்றம்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதல் கட்டமாக 67 கைதிகள் விடு விக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

    அதன்படி கடந்த 6-ந்தேதி சென்னை புழல் சிறைச்சாலையில் இருந்து 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 கைதிகளும், திருச்சி மத்திய சிறையில் இருந்து 10 பேரும், சேலம் சிறையில் இருந்து 4 பேரும், பாளையங்கோட்டை சிறையில் இருந்து 2 பேரும் என மொத்தம் 68 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    புழல் சிறையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு 52 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா, டி.ஐ.ஜி. முருகேசன், சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினி ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். விடுதலையான கைதிகள் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களை போலீசார் வழங்கினார்கள்.

    கைதிகளை வரவேற்க அவர்களது உறவினர்கள் சிறை வாசலில் காத்திருந்தனர். அவர்களை கட்டி தழுவி கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.


    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு பெற்ற 10 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், எஸ்.பி., நிகிலா நாகேந்திரன் ஆகியோர் பல்வேறு அறிவுரைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். 10 பேரையும் அழைத்து செல்ல அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறை முன்பு குவிந்திருந்தனர். பின்னர் அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    இதேபோல் சேலம் சிறையில் 4 கைதிகளும், பாளையங்கோட்டையில் 2 கைதிகளும் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் 68 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி, சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற (25.2.2018 அன்றைய தேதி அடிப்படையில்) 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளனர். அதன்படி புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

    இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 
    ×