search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puzhal Central jail"

    • பேராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • கைதிகள் நல உணவகத்தை மீண்டும் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    சென்னை அருகே புழல் சிறையில் வளாகத்தில் விசாரணைக் கைதி சிறை செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் நேற்று காலை 6 மணியளவில் தங்களது அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சிறையின் இரண்டாவது பிளாக் பகுதியில் இருக்கும் கைதிகள் சுமார் 40 பேர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் கைதிகள், சிறை வளாகத்தில் செயல்பட்டு வந்த கைதிகள் நல உணவகத்தை மீண்டும் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிற்பகலில் கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    சிறைக்குள் செல்லுமாறு கூறியதால் புழல் ஜெயிலில் போலீஸ்காரரை தாக்கிய நைஜீரய கைதி, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    போலி பாஸ்போட்டு வழக்கில் நைஜீரியா நாட்டை சேர்ந்த நிக் கோலஸ் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவரை வழக்கு சம்பந்தமாக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு நள்ளிரவில் புழல் ஜெயிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது நிக்கோலஸ் அவரது அறைக்கு போகாமல் போலீஸ்காரருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை பணியில் இருந்த பிரபாகரன் என்ற போலீசார் கண்டித்து நிக்கோலஸை சிறை அறைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் போலீஸ்காரர் பிரபாகரனை தாக்கி கட்டிப்புரண்டு சண்டை போட்டார். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர்.

    பின்னர் காயம் அடைந்த நிக்கோலசை சிகிச்சைக்காக புழல் சிறை மருத்துவ மனையில் சேர்த்தனர். இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews

    புழல் ஜெயிலில் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த கைதியை போலீசார் 4 மணி நேரத்திற்கு பின்பு பிடித்தனர்.

    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் தினமும் இரவு கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு அவரவர் அறைகளில் அடைக்கப்படுவார்கள். விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஜெயிலில் 1,543 பேர் உள்ளனர்.

    நேற்று இரவு 9.30 மணிக்கு போலீசார் விசாரணை கைதிகளை கணக்கெடுத்த போது ஒரு கைதி மட்டும் மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார், அந்த கைதி தப்பி சென்று இருப்பாரோ? என்ற பரபரப்பு நிலவியது.

    ஆனால் அந்த கைதி ஜெயிலுக்குள்ளேயே பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயில் முழுவதும் தீவிரமாக தேடினார்கள். ஆனால் அவரை நள்ளிரவு வரை கண்டுபிடிக்க முடிய வில்லை.

    நள்ளிரவு 1.30 மணி அளவில் ஜெயிலில் உள்ள நூலகத்தின் மொட்டை மாடியில் மாயமான கைதி பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவரை பிடித்துக் கொண்டு வந்து அறையில் அடைத்தனர்.

    விசாரணையில் அவர் பெசன்ட் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும், வழிப்பறி வழக்கில் அவரை கடந்த 1-ந்தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜெயிலில் இருந்து தப்பிக்க முயன்றதும் தெரிய வந்தது.

    மாயமான கைதியை போலீசார் 4 மணி நேரத்திற்கு பின்பு பிடித்தனர். கைதி ஜெயிலில் இருந்து தப்பிக்காமல் சிக்கியதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 கைதிகள் இன்று விடுதலையானார்கள். #MGRCentenary
    செங்குன்றம்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதல் கட்டமாக 67 கைதிகள் விடு விக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

    அதன்படி கடந்த 6-ந்தேதி சென்னை புழல் சிறைச்சாலையில் இருந்து 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 கைதிகளும், திருச்சி மத்திய சிறையில் இருந்து 10 பேரும், சேலம் சிறையில் இருந்து 4 பேரும், பாளையங்கோட்டை சிறையில் இருந்து 2 பேரும் என மொத்தம் 68 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    புழல் சிறையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு 52 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா, டி.ஐ.ஜி. முருகேசன், சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினி ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். விடுதலையான கைதிகள் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களை போலீசார் வழங்கினார்கள்.

    கைதிகளை வரவேற்க அவர்களது உறவினர்கள் சிறை வாசலில் காத்திருந்தனர். அவர்களை கட்டி தழுவி கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.


    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு பெற்ற 10 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், எஸ்.பி., நிகிலா நாகேந்திரன் ஆகியோர் பல்வேறு அறிவுரைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். 10 பேரையும் அழைத்து செல்ல அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறை முன்பு குவிந்திருந்தனர். பின்னர் அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    இதேபோல் சேலம் சிறையில் 4 கைதிகளும், பாளையங்கோட்டையில் 2 கைதிகளும் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary
    ×