என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா- கோவை மத்திய சிறையில் இருந்து 18 கைதிகள் விடுதலை
    X

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா- கோவை மத்திய சிறையில் இருந்து 18 கைதிகள் விடுதலை

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள 18 தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    கோவை:

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தண்டனை கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய அரசு முடிவெடுத்தது.

    இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை 6 மணியளவில் கோவை மத்திய சிறையில் உள்ள 18 தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
    Next Story
    ×