என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெரியாருக்கு சாதிச்சாயமா? - மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்
    X

    பெரியாருக்கு சாதிச்சாயமா? - மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்

    • சாதி, மதத்தை ஒதுக்கி வையுங்கள்.
    • விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சாதி, மத பாகுபாடு காட்டுவதில்லை.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.

    முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதி, மத பிரிவினை சிந்தனை உங்களை பிரிவுபடுத்த விடாதீர்கள்.

    * போதைப்பொருளை போன்று சாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.

    * மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை இருக்கக்கூடாது.

    * ஒன்றிய அரசின் யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதிச்சாயம்.

    * பெரியாருக்கே சாதிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள்.

    * இயற்கையின் அம்சங்களான வெயிலும் மழையும் சாதி, மதம் பார்த்தா வருகிறது.

    * விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சாதி, மத பாகுபாடு காட்டுவதில்லை.

    * நேர்மறை சிந்தனையுடன் மாணவர்கள் பயணிக்க வேண்டும்.

    * எதுவாக இருந்தாலும் அறிவியல்பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும்.

    * நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×