என் மலர்
நீங்கள் தேடியது "அழகிரி"
- சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி வருகை தந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
நாட்டில் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். பிரிவினைவாதம் அல்ல. இந்திய எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர் என மகாத்மா காந்தி கூறினார். அவர்களை மத ரீதியாக பிரிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்தியா வலிமை மிக்க நாடாக இருப்பதற்கு காரணம் வேற்றுமையில் ஒற்றுமை மட்டும்தான். ஆனால் இன்று துணை ஜனாதிபதியோ உச்சநீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார்.
ஜனநாயகத்தில் குடியரசு தலைவர் உள்பட யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கவர்னருக்கு எதிரான வழக்கை கொண்டு சென்று இந்தியாவுக்கான தீர்ப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார்.
தமிழகத்தின் பல்கலைக்கழக வேந்தராகவும் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை சட்டத்தின் வாயிலாக பெற்றுள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது எழுச்சி இல்லாத கூட்டணியாக உள்ளது. ஒரு கூட்டணி அமைந்தால் அது 2 தரப்பைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது. அந்த கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் அது போன்ற பிரச்சினை இல்லை.
வருகிற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே மகத்தான வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கேட்போம்.
அமைச்சர் பொன்முடி பேசியது தவறானது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். கட்சி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு தவறுக்கு ஒரு தண்டனைதான். பெரியார் பேசியதை விடவா பொன்முடி பேசி விட்டார். இதை எதிர்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம்.
- மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவிலில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாதத்திற்குரியது. காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு என்பதில் உறுதி யாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., கட்சிகள், கள்ளக்குறிச்சி மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறீர்களா அல்லது அந்த மரணத்தை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்களா என்பது தெரியவில்லை.
இந்த கட்சிகள் தங்களின் மது கொள்கையை வெளிப்படுத்த மறுக்கின்றன. இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் அந்த ஊரில் மது விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அழகிரி, ஸ்டாலினை வீழ்த்த மதுவை கையில் எடுத்திருக்கிறார்கள். முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம். பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்கள் மீது இல்லை. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.
தவறு செய்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்க வில்லை. குற்றத்தை நியாயப்படுத்தவில்லை. சரியான பாதையில் அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கருத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அழகிரி கூறினார்.






