search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mk alagiri"

    • துரை தயாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
    • மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.

    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவானது.

    இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகி வந்தனர். விசாரணை முடிவில் கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி முத்துலட்சுமி பிறப்பித்தார். இதையடுத்து இன்று மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மீதமுள்ள மற்றொரு திருஞானம், கருப்பணன், சோலை, ராமலிங்கம் ஆகிய 4 பேரும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலையானதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
    • மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

    • மதுரையில் நடைபெற்று வரும் குற்ற வழக்கில் அரசு தரப்புக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் மனுதாரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல.

    புதுடெல்லி:

    மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், 'கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2020-ம் ஆண்டு மதுரை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை முடித்து வைக்க முயற்சி செய்கின்றனர்.

    எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், 'மதுரையில் நடைபெற்று வரும் குற்ற வழக்கில் அரசு தரப்புக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் மனுதாரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. சாகசமிக்கதாகவும் தோன்றுகிறது.

    இதன்படி இந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.

    • கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.

    வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் இன்று தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    இவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    • மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    மதுரை:

    தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்றார். அவரை மு.க.அழகிரியும், அவரது மனைவி காந்தி அழகிரியும் உச்சி முகர்ந்து வரவேற்றனர்.

    இந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு தனது பெரியப்பா வீட்டிற்கு வந்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் தம்பி முதலமைச்சராகவும், தம்பி மகன் அமைச்சராகவும் இருப்பது பெருமையாக இருப்பதாக மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

    மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

    உதயநிதி ஸ்டாலினை போன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மதுரை வரும்போது மு.க.அழகிரியை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினர் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மு.க.அழகிரி வீடு உள்ள பகுதியில் ரோடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மு.க.அழகிரியின் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.

    மதுரையில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த அவர், நேற்று மாலை நாகர்கோவிலுக்கு புறப்பட தயாரானார். அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது அவர் மு.க.அழகிரியின் நலம் குறித்து விசாரித்துள்ளார். மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். அவர்கள் இருவரும் 5 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியுடன் போனில் பேசி நலம் விசாரித்திருப்பது மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
    • அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை சந்தித்துள்ளார்

    மதுரை:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்து சேர்ந்தார்.

    இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள வீட்டில் சந்தித்தார். மு.க.அழகிரி தனது வீட்டு வாசலில் காத்திருந்து உதயநிதியை வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    • மு.க.அழகிரி இன்று காலை மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள இசக்கிமுத்து வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
    • பின்னர் அவரது குடும்பத்தாரிடம் மருத்துவ செலவுக்கு தேவையான பண உதவி செய்தார்.

    மதுரை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் மதுரை டி.வி.எஸ். நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முன்னாள் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர். இவருக்கு மதுரையில் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளரான இசக்கிமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    அவரை மு.க.அழகிரி நேரில் சந்திக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று காலை மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள இசக்கிமுத்து வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    பின்னர் அவரது குடும்பத்தாரிடம் மருத்துவ செலவுக்கு தேவையான பண உதவி செய்தார். அவரை நன்றாக கவனிக்கும்படி தெரிவித்துவிட்டு வெளியே வந்தார்.

    இதை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அவரிடம்' நீங்கள் மீண்டும் மத்திய மந்திரியாக வர வாய்ப்பு உள்ளதா? என்றும், தி.மு.க. வில் இணைவீர்களா? உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?' என்று கேட்டனர். ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்று விட்டார்.

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் சம்பளம் பெறும் பினாமிகளாக உள்ளனர் என்று மு.க. அழகிரி தெரிவித்தார். #mkalagiri #dmk #mkstalin

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் எம்.எல்ராஜ் மகள் லிபியா-சந்தோஷ் குமார் திருமணம் மதுரையில் இன்று நடைபெற்றது.

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில், மு.க. அழகிரி பேசியதாவது:-

    எம்.எல்ராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வந்துள்ளேன். என்னை போல் பலரும் வாழ்த்த வந்துள்ளனர்.

    கட்சியில் பகுதி செயலாளர் துணைச் செயலாளர், இளைஞர் அணி, மாவட்ட துணைச் செயலாளர் என பல பொறுப்புகளுக்கு படிப்படியாக வந்தவர் எம்.எல்ராஜ். கலைஞர் உடன் பிறப்புகளை அப்படித்தான் வைத்திருந்தார்.

    தற்போது தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்கும் பினாமிகளாக உள்ளனர். வெளியில் உள்ளவர்கள் அவர்களை கட்டுப்படுத்துகின்றனர். தற்போது கட்சி அப்படித் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.கே. ராஜேந்திரன், கவுஸ்பாட்சா, முன்னாள் மேயர் தேன்மொழி கோபிநாதன், முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #mkalagiri #dmk #mkstalin

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்ற நிருபர்களின் கேள்விக்கு முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி பதில் அளித்தார். #MKAlagiri #ParliamentElection
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு? என்பதை இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கிறேன்.



    கடந்த தேர்தலில் என்ன முடிவு வந்ததோ? அதுபோல் தான் இந்த முறையும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

    இவ்வாறு மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri #ParliamentElection

    மதுரை அருகே மு.க.அழகிரி ஆதரவாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 45). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இன்று அதிகாலை எழுந்த மதுரைவீரன் வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்கு வந்தார். அங்கு டீ குடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப தயாரானார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி (32), சின்னச்சாமி உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் மதுரைவீரனை சுற்றிவளைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

    ரத்த வெள்ளத்தில் மிதந்த மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாலமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் மதுரைவீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதுரைவீரன் கொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மு.க.அழகிரியின் ஆதரவாளருமான மதுரைவீரன் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    உழைப்பு மற்றும் சுயமரியாதையை கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். #DMK #MKAlagiri
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்து கொண்டார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது;

    கருணாநிதியிடம் உழைப்பு, சுயமரியாதை ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்

    தேர்தல் வரும்வரை நாம் காத்திருப்போம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நமது உழைப்பு மற்றும் திறமையை வெளிக்காட்டுவோம். பதவி ஆசை காட்டி, தனது ஆதரவாளர்களை ஸ்டாலின் தரப்பினர் இழுக்க முயல்கிறது.

    தொண்டர்களுக்காக பேசிய என்னை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றினார்கள், பதவிக்கு ஆசைப்பட்டவர்களே ஸ்டாலினுடன் உள்ளனர் என தெரிவித்துள்ளார். #DMK #MKAlagiri
    ×