search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் இன்று திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம்- கி.வீரமணி பங்கேற்பு
    X

    ஈரோட்டில் இன்று திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம்- கி.வீரமணி பங்கேற்பு

    • திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது.
    • ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

    ஈரோடு:

    திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்திற்கு செயலவை தலைவர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர் சு.முத்துசாமி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மேயர் நாகரத்தினம் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×