ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் - நீதிபதி சுவாமிநாதன்

தமிழகத்தில் சிலர் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.குருவின் அருள் மூலமே தைரியமும் ஆதரவும் கிடைக்கும்.
ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் - நீதிபதி சுவாமிநாதன்
Published on

திருப்பரங்குன்றம் மலையில் தர்காவிற்கு அருகில் உள்ள தூணில் விளக்கேற்ற வேண்டும் என்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவரின் மனுவை ஏற்று விளக்கேற்ற உத்தரவிட்டவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

இந்த உத்தரவும், அதை தமிழக அரசு செயல்படுத்தாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீதிபதி சுவாமிநாதன், "தமிழகத்தில் சிலர் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

குருவை கடவுளின் உருவமாகப் பார்ப்பதால் எங்களை அவர்கள்  அயோக்கியர்கள், முட்டாள்கள் , காட்டுமிராண்டிகள் என்று  அழைக்கிறார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள் மற்றும் காட்டுமிராண்டிகள்.

குருவின் அருள் மூலமே தைரியமும் ஆதரவும் கிடைக்கும், குருமார்களின் அருகே செல்லும்போது அவர்களின் Aura பக்தர்களின் பலவீனங்களை நீக்க உதவும்

எனது பணிக்காலத்தில் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. இன்னும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்." என்று பேசியுள்ளார். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com