எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்கு முதலிடம் அளிக்கின்றன: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்

நாடுதான் முதல். அதன்பிறகுதான் கட்சி என்று பாஜக நம்புகிறது. சுயநலம் என்று வரும்போது அது கடைசிதான்.ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சுய நலம்தான் முதல் மற்றும் கடைசி விசயமாகும்
எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்கு முதலிடம் அளிக்கின்றன: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்
Published on

பாஜக தேசியத் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்டபின் முதன் முறையாக தனது சொந்த மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிதின் நபின் பேசியதாவது:-

பீகாரில் இருந்து காட்டு ராஜ்ஜியத்தை வேரோடு சாய்ப்பதற்காக, கட்சி தொண்டர்கள் போராடினார்கள். பிரசுரங்கள் வழங்குவதற்கு கூட ஆபத்தான நிலையில் தங்களுக்கு என்ன நிகழும் என்பதை தெரிந்து கொண்டும் பணியாற்றினார்.

அந்த தியாக உணர்வு தொடர்கிறது. கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு தங்களுக்கு எதிர்வினையாக என்ன கிடைக்கும் என்பதை தெரிந்தும் கூட கட்சி தொண்டர்கள் தியாகங்களை செய்து வருகின்றனர்.

நாடுதான் முதல். அதன்பிறகுதான் கட்சி என்று பாஜக நம்புகிறது. சுயநலம் என்று வரும்போது அது கடைசிதான். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சுய நலம்தான் முதல் மற்றும் கடைசி விசயமாகும்.

இவ்வாறு நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com