என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ் பாதயாத்திரை"
- மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் காங்கிரஸ் கட்சியுடையதாக இருக்கும்.
- மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறோம்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துகிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் தொடங்கிய பாதயாத்திரையை கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொடங்கி வைத்தார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு தெருக்களிலும் பாதயாத்திரையாக சென்று மக்களைச் சந்தித்து என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களுடன் கூடிய முக கவசங்களை அணிந்து வந்தனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி உட்பட பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரையின் முடிவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த நடை பயணம் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்துக்கானது. 4½ஆண்டுகால என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியில் ஊழலைத் தவிர வேறொன்றும் நடைபெறவில்லை. 390 ரெஸ்டோபார்களை திறந்து புதுச்சேரி மக்களின் நிம்மதியைக் குலைத்துள்ளனர்.
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் காங்கிரஸ் கட்சியுடையதாக இருக்கும். இதை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறோம். 2026-ல் காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறும். ராகுல் காந்தியை சந்தித்து பாதயாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டோம். கண்டிப்பாக வருவதாக கூறியுள்ளார். அவர் வரும் தேதியை விரைவில் அறிவிப்போம் என்றார்.
- காங்கிரஸ் பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென ஒரு நபர் ஓடிவந்து கட்டி பிடித்தார்.
- அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர்.
சண்டிகர்:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே இந்த யாத்திரை கடந்து சென்றுள்ளது. கடந்த 6-ம் தேதி அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. அதன்பின் இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது.
லூதியானாவில் கடந்த 14-ம் தேதி நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால், அன்றைய தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்ப்பூர் பகுதியில் காலையில் யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. இதில், ராகுல் காந்தியை திடீரென ஒருவர் ஓடி வந்து கட்டி பிடித்துள்ளார். அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.
- எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பாதயாத்திரை.
சென்னை:
தமிழகம் முழுவதும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வெறுப்பு, அரசியலுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த பாத யாத்திரை சென்னையில் நாளை (2-ந் தேதி) காலை 7 மணியளவில் அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மேதின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடா ஓட்டல் சந்திப்பு, லாங்ஸ் கார்டன், புதுப்பேட்டை, பாந்தியன் ரோடு வழியாக அருங்காட்சியகத்தை அடைகிறது. அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரகாரத்தை நிறைவு செய்கிறார்கள்.
இதேபோல் நாளை மாநிலம் முழுவதும் 77 இடங்களில் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சியில் திருநாவுக்கரசர் தலைமையிலும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலும் சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையிலும் இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலும் பாத யாத்திரை நடக்கிறது.






