search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென கட்டி பிடித்த நபரால் பரபரப்பு
    X

    பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென கட்டி பிடித்த நபரால் பரபரப்பு

    • காங்கிரஸ் பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென ஒரு நபர் ஓடிவந்து கட்டி பிடித்தார்.
    • அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர்.

    சண்டிகர்:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே இந்த யாத்திரை கடந்து சென்றுள்ளது. கடந்த 6-ம் தேதி அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. அதன்பின் இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது.

    லூதியானாவில் கடந்த 14-ம் தேதி நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால், அன்றைய தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்ப்பூர் பகுதியில் காலையில் யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. இதில், ராகுல் காந்தியை திடீரென ஒருவர் ஓடி வந்து கட்டி பிடித்துள்ளார். அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×