என் மலர்
நீங்கள் தேடியது "minister namachivayam"
- புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற் சாலையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
- இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்தி னருடன் வணிகவரித்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற் சாலையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
இவர்களுக்கு வேலை வழங்கக்கோரி தொழிற் சங்கத்தினர் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்தி னருடன் வணிகவரித்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மா, துணை ஆணையர் இராகினி, சமரச அதிகாரி வெங்கடேசன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், கிருஷ்ண மூர்த்தி, ஆய்வாளர் முருகையன்.
நல அதிகாரிகள் கஸ்தூரி, ஆறுமுகம், தொழிற்சங்க நிர்வாகிகள் சோ. பாலசுப்பிரமணியம், புருஷோத்தமன், மோதிலால், ெஜயபாலன், சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற் சங்கங்களின் ஒரு ங்கிணைப்பு நிர்வாகிகள், ரமேசு, முருகையன், விஜயன், பாஸ்கர், கோ.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தனியார் நிர்வாகத்திடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழி லாளர்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலை புதுவை மாநிலத்தில் தொடர்ச்சியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் 60 பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி
எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மீனவரணி துணைத்தலைவர் நடராஜ், வர்த்தக பிரிவு தலைவர் சத்தியராஜ் விவசாய அணி அய்யனார், தொகுதி பொதுச்செயலாளர்கள் விஜயகுமார், பாலகுரு, மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கமலக்கண்ணன், திரிச்சந்திரன், ஓ.பி.சி. அணி லட்சுமி, மகளிர் அணி புவணேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
- அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரகசியங்களை வெளியிடும் வகையில் தோலை உரிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் தோலை உரிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார்? என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் தோல்தான் உரிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள்தான் உரித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.
எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம்.
புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம். பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 2 அடுக்கு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
- கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 2 அடுக்கு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். சிவசங்கரன் எம்.எல்.ஏ., டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஐ.ஜி. சந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் ரங்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய போலீஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளோம். ரூ.3 கோடியில் கட்டப்படும் இந்த கட்டிடம் 8 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். சைபர் க்ரைமில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதில் 500 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஆயிரம் வழக்கு உள்ளது. அவற்றை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இதனால் புதிய தொழில் நுட்பங்களுடன் சைபர் க்ரைம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படும். கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, புதுவைக்கு வந்தபோது பெஸ்ட் புதுவையாக்குவோம் என உறுதி அளித்தார். அந்த அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.
கடந்த 2, 3 மாதத்திற்கு முன்பாக லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது, மேலும் 60 சப்-இன்ஸ்பெக்டர் பதவி நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாது வெகு விரைவாக, காவல் துறை டிரைவர்களுக்கான பணியிட அறிவிப்பு வர உள்ளது.
26-ந் தேதி 356 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட உள்ளது.
சைபர் க்ரைமில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவர். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதை பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் காவல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
காவல்துறையில் எம்.பி.சி. இடஒதுக்கீட்டை நிறைவேற்ற அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அனைத்து சாலைகளையும் புதிதாக போட நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்கா லத்தில் பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா ந டந்தது.
- அமைச்சர் நமச்சிவாயம் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா நிர்வாகிகள் தமிழ்மணி, ராஜா, சுந்தரமூர்த்தி, கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அலுவலகர் தனசெல்வன் நேரு, பள்ளி தலைமை ஆசிரியர் ரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் 3 ஆயிரத்து 416 வகுப்பறைகள் உள்ளது. இதில் கடந்த காலங்களில் 216 மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டது. மீதமுள்ள 3 ஆயிரத்து 200 வகுப் பறைகளும், ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 1 ரூபாய் பஸ் இனி இலவசமாக இயக்கப் படும்.
மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அரசு பள்ளியின் சுற்றுச்சூழல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாணவர்களின் கல்வித்திறனை அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் இனி பாடம் கற்பிக்காமல். நல்ல ரிசல்ட் கொடுக்காமல் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வில்லியனூர்:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளியில் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார்.
பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் அமைதியான முறையில், அதே வேளையில் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அதற்கு காரணம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மோடியின் எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. அதேபோல் புதுவையிலும் மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
இந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது. அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று தெரிந்து விட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த தொகுதி மக்கள் ஆளுங்கட்சி வேட்பாளரை எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #rahulgandhi #pmmodi #TNElections2019
புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலை எதிர் கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. பொதுப்பணி, மின், உள்ளாட்சி, தீயணைப்பு, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினர்.
புயலால் 11 இடங்களில் மரம் விழுந்ததாக புகார் வந்தது. உடனடியாக அந்த பகுதியில் மரங்களை அப்புறப்படுத்தி உள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பெரியளவில் புதுவையில் சேதம் ஏற்படவில்லை.
காரைக்காலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு அமைச்சர் கமலக் கண்ணன் முகாமிட்டு பணிகளை செய்து வருகிறார்.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் காரைக்காலுக்கு சென்றுள்ளனர். அங்கு மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக பிரதான சாலைகளில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
பின்னர் உள்புற சாலைகளில் மரங்களை அகற்றுவோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதை சீரமைக்க புதுவையில் இருந்து 30 பேர் கொண்ட மின்சார குழு காரைக்கால் சென்றுள்ளது. அங்கு கூரை வீடுகள் சேதமடைந்துள்ளது.
இன்று மாலைக்குள் காரைக்கால் மாவட்டத்தை சகஜநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. ஜென ரேட்டர்களை இயக்கி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
புதுவையிலும் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடர் மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம், தலைமை என்ஜினீயர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் நமச்சிவாயம் இன்று காலை வில்லியனூர் தொகுதி முழுவதும் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டார். அப்போது எஸ்.எஸ்.நகர், உத்திரவாகினி பேட் ஆகிய பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் கழிவு நீர் வாய்க்காலில் தூர் வாரிய மண் அப்பகுதியிலேயே குவிக்கப்பட்டு இருந்ததை கண்ட அமைச்சர் நமச்சிவாயம் அதனையும் அகற்றுமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சர் நமச்சிவாயத்துடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையன் ஆறுமுகம் உடன் சென்றார். #gajacyclone #namachivayam #rain
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-
சிவா:- புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் காமராஜர் மணிமண்டபம் அமைக்கும் பணி எப்போது முடிவடையும்? இதற்காக இதுவரை செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?
அமைச்சர் நமச்சிவாயம்:- இந்த நிதியாண்டில் பணிகள் முடிவடையும். ரூ.10 கோடியே 78 லட்சம் இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
சிவா:- நிலத்தை கையகப்படுத்திய தொகையை சேர்த்துள்ளீர்களா? நில ஆர்ஜிதம் செய்ய எவ்வளவு தொகை கொடுத்தீர்கள்? மிகப்பெரிய தொகையை கொடுத்து நிலத்தை ஆர்ஜிதம் செய்ததாக சொல்லப்படுகிறது.
காமராஜருக்கு மணிமண்டபம் அமைப்பதை வரவேற்கிறோம். தமிழகம் போன்ற மாநிலங்களில் தலைவர்கள் பெயரால் மாளிகைகள் அமைக்கின்றனர்.
ஆனால், அங்கு அரசு அலுவலகங்கள் இயங்குகிறது. வ.உ.சி .பள்ளி, பிரெஞ்சு பள்ளிக்கான கட்டிடங்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கி கட்டித்தர கோரினோம்.
ஆனால், அரசு செய்ய முன்வரவில்லை. 10 ஆண்டாக தொடர்ந்து பணி நடந்தும் முடிவடையவில்லை.
அன்பழகன்:- குயில் தோப்பு நிலத்தையே அரசு கையகப்படுத்தியது. இதன்பிறகு அந்த குயில் தோப்பு நிலத்தை தனியார் பிளாட் போட்டு விற்றுவிட்டனர். இதன்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நமச்சிவாயம்:- கடந்த 2006-ம் ஆண்டு காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பணி எடுத்த ஒப்பந்ததாரர் பணியை பாதியில் விட்டு விட்டு சென்று விட்டார்.
இதனால் 2009-ல் மீண்டும் டெண்டர் விட்டு பணிகள் நடந்தது. இதுவரை மணிமண்டபத்திற்காக ரூ.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நானும், சபாநாயகரும் மணிமண்டப பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம்.
முதல்-அமைச்சரிடம் நிதி ஒதுக்கித்தரும்படியும் கோரியுள்ளோம். 4 மாதத்திற்குள் மணிமண்டப பணிகள் முடிவடைந்து நாம் அனைவரும் சேர்ந்தே மணிமண்டபத்தை திறக்கலாம். அங்கு அரசு அலுவலகம், சென்டாக் அலுவலகம், நூலகம் ஆகியவை செயல்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெருமாள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து 2013-ம் ஆண்டு புதுவை மாநில தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது.
இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்தலட்சுமி என்பவர் பிறபடுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் தேர்தல் தேதி அறிவித்தும் தேர்தல் நடைபெறாமல் போனது.
இதற்கிடையே புதுவை அரசு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை மத்திய அரசிடம் தருமாறு கேட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு மக்கள் தொகை விவரத்தை வழங்கவில்லை இதனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு புதுவையில் 7 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமலேயே உள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் இன்று தலைமை செயலகத்தில் உள்ள 4-வது மாடி கருத்தரங்கு அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், உள்ளாட்சிதுறை செயலர் ஜவகர், இயக்குனர் மலர்க்கண்ணன், சட்டத்துறை சார்பு செயலர் முருகவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் உத்தரவுகளை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். #tamilnews