என் மலர்
நீங்கள் தேடியது "minister namachivayam"
- புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது.
- கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி காவல்துறை சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஒரு சில சாலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, போக்கு வரத்துத்துறையுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரப் பகுதி முழுவதும் சுற்றுலா வரும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாமல் அரசு பஸ்சில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறோம்.
இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியுடன் விரைவில் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது. இதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஒரு பட்டாலியன் படையைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
ஏற்கெனவே புதுச்சேரியில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அவருக்குதான் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் புகலிடமாக இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும் அந்தக் கட்சி ஏற்கெனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்தது. இப்போது கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது. மீண்டும் அனுமதி கேட்டால் அப்போது முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 2 அடுக்கு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
- கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 2 அடுக்கு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். சிவசங்கரன் எம்.எல்.ஏ., டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஐ.ஜி. சந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் ரங்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய போலீஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளோம். ரூ.3 கோடியில் கட்டப்படும் இந்த கட்டிடம் 8 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். சைபர் க்ரைமில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதில் 500 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஆயிரம் வழக்கு உள்ளது. அவற்றை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இதனால் புதிய தொழில் நுட்பங்களுடன் சைபர் க்ரைம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படும். கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, புதுவைக்கு வந்தபோது பெஸ்ட் புதுவையாக்குவோம் என உறுதி அளித்தார். அந்த அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.
கடந்த 2, 3 மாதத்திற்கு முன்பாக லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது, மேலும் 60 சப்-இன்ஸ்பெக்டர் பதவி நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாது வெகு விரைவாக, காவல் துறை டிரைவர்களுக்கான பணியிட அறிவிப்பு வர உள்ளது.
26-ந் தேதி 356 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட உள்ளது.
சைபர் க்ரைமில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவர். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதை பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் காவல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
காவல்துறையில் எம்.பி.சி. இடஒதுக்கீட்டை நிறைவேற்ற அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அனைத்து சாலைகளையும் புதிதாக போட நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்கா லத்தில் பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
- அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரகசியங்களை வெளியிடும் வகையில் தோலை உரிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் தோலை உரிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார்? என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் தோல்தான் உரிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள்தான் உரித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.
எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம்.
புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம். பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
முதலியார்பேட்டை பா.ஜனதா., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அசோக் பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் 60 பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி
எம்.பி. தொகுதி தலைவர் இன்பசேகர், நகர மாவட்ட துணை தலைவர்கள் குமார், விஜயரங்கம், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மீனவரணி துணைத்தலைவர் நடராஜ், வர்த்தக பிரிவு தலைவர் சத்தியராஜ் விவசாய அணி அய்யனார், தொகுதி பொதுச்செயலாளர்கள் விஜயகுமார், பாலகுரு, மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கமலக்கண்ணன், திரிச்சந்திரன், ஓ.பி.சி. அணி லட்சுமி, மகளிர் அணி புவணேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற் சாலையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
- இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்தி னருடன் வணிகவரித்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற் சாலையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
இவர்களுக்கு வேலை வழங்கக்கோரி தொழிற் சங்கத்தினர் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்தி னருடன் வணிகவரித்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மா, துணை ஆணையர் இராகினி, சமரச அதிகாரி வெங்கடேசன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், கிருஷ்ண மூர்த்தி, ஆய்வாளர் முருகையன்.
நல அதிகாரிகள் கஸ்தூரி, ஆறுமுகம், தொழிற்சங்க நிர்வாகிகள் சோ. பாலசுப்பிரமணியம், புருஷோத்தமன், மோதிலால், ெஜயபாலன், சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற் சங்கங்களின் ஒரு ங்கிணைப்பு நிர்வாகிகள், ரமேசு, முருகையன், விஜயன், பாஸ்கர், கோ.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தனியார் நிர்வாகத்திடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழி லாளர்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலை புதுவை மாநிலத்தில் தொடர்ச்சியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
- ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தற்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது.
இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதன்படி வருகிற கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித்துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.
தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.
ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர். 4 முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாகியில் மலையாளமும் படித்தனர்.
தற்போது சி.பி.எஸ்.இ. முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்தித்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதுபற்றி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம்.
நீட், ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரையும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் தபால் வேன் மூலமாக அனுப்பும் பணி தொடங்கியது.
இப்பணியை புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் பெங்களுருவில் இருந்தும், தமிழ் பாடப் புத்தகம் தமிழக பாடநூல் கழகத்தில் இருந்து வந்துள்ளது. பள்ளி சீருடைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது.
தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து கட்டணங்களை இறுதி செய்து வெளியிடுவார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் என்னை வந்து சந்தித்தனர். இது சம்பந்தமாக முதல்-அமைச்சர், துறைச் செயலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
தமிழை கட்டாயப்பாடமாக்க என்னென்ன சாத்திய கூறுகள் இருக்கிறதோ, எந்தெந்த மாநிலங்களில் அதுபோன்று உள்ளதோ என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்போம்.
இதில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை. அவரவர் விரும்பும் பாட மொழியை எடுத்து படிக்கலாம். இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது தான் திணிப்பாகும்.
இது தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை போக்க அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.
- அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
- அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு உள்துறை அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
விழாவில் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் பெரிய ஏரியின் தென்கிழக்கு பகுதி தூர்வாரும் பணியினை ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், தேத்தம்பாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அய்யனார் கோவில் குளம் தூர்வாருதல், திருக்கனூர் பெரிய ஏரி கிழக்கு பகுதியினை ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் திருக்கனூர் பெரிய ஏரியில் பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் இலவச அரிசி வழங்க வேண்டும் எனவும், திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பணிகளை முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனவும், திருக்கனூர் பள்ளிக்கூடத்தினை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு முறையாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பிரமுகர்கள் போட்டோ ராஜா, முத்தழகன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
- தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஒரு அரசு பள்ளி மாணவர் வந்து பேசினார். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு கலவை சாதம் நன்றாக உள்ளது. ஆனால் சாம்பார் சாதம் நன்றாக இல்லை. சாம்பார் சாதம் வழங்கும் நாளில் சரியாக அரிசி வேகவில்லை, சுவையும் குறைவாக உள்ளது என புகார் தெரிவித்தார்.
ஏற்கனவே அக்சயபாத்திரம் தொண்டு நிறுவனம் அரசு பள்ளிகளுக்கு மதிய உணவை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சைவ உணவுகளை மட்டுமே வழங்கும்.
இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனால் பகுதிநேர ஊழியர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியினரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதம் சுவையாக இல்லை என சட்டசபையில் புகார் கூறியிருந்தனர். தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் அக்சய பாத்திரம் நிறுவனத்தினரை அழைத்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். சாம்பார் தனியாகவும், சாதம் தனியாகவும் வழங்க முடியுமா? என அமைச்சர் ஆலோசித்து வருகிறார்.
- வீரர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.
- புதுவை ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து முதல் முறையாக ரோலர் ஸ்கேட்டிங் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க புதுவையை சேர்ந்த மெர்லின்தனம், பியுஷாதரனி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
மேலும் உலக அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்கு பெற கிரிதரன், மெர்லின்தனம், பியுஷாதரனி ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீரர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் புதுவை ரோலர் ஸ்கேட்டிங் செயலாளர் தாமஸ், புதுவை ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு ஆகியோர் பங்கேற்றனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
- பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட தேத்தம்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை சாலையை புதுவை அசோக் பாபு எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வாய்க்கால் வசதி மேம்படுத்துதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருக்கனூர் தேவநாதன் நகரில் வெங்கடேசன் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உட்புற சாலைகளுக்கு வாய்க்கால் வசதி மற்றும் சாலையை மேம்படுத்துதல் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு பணிகளையும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் புதுவைக்கு வரும்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுங்கள், புதுவையை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என கூறியிருந்தார்.
- ஏ.எப்.டி. மில்லில் பணியாற்றிய பாதி தொழிலாளர்களுக்கு ரூ.61 கோடி சம்பள பாக்கி கொடுத்துள்ளோம்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து வியாபாரிகள் விளக்க கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
பா.ஜனதா அனைத்து மக்கள் குறைகளையும் தீர்த்து வருகிறது. என்.ஆர்.காங்., பா.ஜனதா தேசிய கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து புதுவை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் புதுவைக்கு வரும்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுங்கள், புதுவையை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என கூறியிருந்தார். அதன்படி பல்வேறு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி தாக்கல் செய்யப்படும்.
அப்போது எந்த திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டார். அதன்படி முதல் முறையாக ரூ. 1,450 கோடி கூடுதலாக நிதியை மத்திய அரசு வழங்கியது.
2017 முதல் தொழில் தொடங்க ஊக்கத்தொகை கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது ரூ.30 கோடி நிதி முழுமையாக கொடுக்கப்ப ட்டுள்ளது. ஏ.எப்.டி. மில்லில் பணியாற்றிய பாதி தொழிலாளர்களுக்கு ரூ.61 கோடி சம்பள பாக்கி கொடுத்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
வருகிற 7-ந் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகிறார். அப்போது வியாபாரிகளின் கோரிக்கை களை தெரிவிக்கலாம். பா.ஜனதா நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சி. ஸ்மார்ட் சிட்டி மூலம் குபேர் மார்க்கெட் சீரமைக்கப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடி வந்துள்ளது. எனவே பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






