போலீசாருக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்

அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கடிதம் போலீசாருக்கும் ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாருக்கும் மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.
வழக்கறிஞர் தினேஷ்,
வழக்கறிஞர் தினேஷ்,
Published on

புதுச்சேரி:

புதுவை வழக்கறிஞர் தினேஷ், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்ப தாவது:-

புதுவையை சேர்ந்த போலீசார் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதால் அவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. சில போலீசார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மன அழுத்தத்தால் அவர்களது குடும்பத்திலும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகின்றது.

எனவே புதுவையை சேர்ந்த போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், போலீசார் அவர்களது குடும்பத்தாருடன் போதிய நேரத்தை செலவிடுவதற்கு வசதியாக அவர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும்.

மேலும் காவல்துறை சார்பில் போலீசாரின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்திகளை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி வாயிலாக சம்மந்த ப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்படி வார ஓய்வு தேவைபடவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கும் ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாருக்கும் மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.

போலீசாரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களின் குடும்பத்தா ருடன் கொண்டாடி மகிழ அந்த 2 நாட்களிலும் முழு ஊதியத்துடன் கூடிய விடு முறை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com