

புதுச்சேரி:
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் அதன் தலைவர் உமாபதி தலைமையில் ராஜீவ் காந்தி மகளிர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடி பிறந்தநாளில் பிறந்த 15 குழந்தைகளுக்கு பராமரிப்பு பெட்டகம் பரிசளிக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ரிச்சர்ட், ஜான்குமார் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மூத்த தலைவர் இளங்கோவன் உழவர்கரை மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன், தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நெல்லித்தோப்பு தொகுதி சார்பில் பூங்குன்றனார், ரேணுகாதேவி, மாதவி திலகவதி, பக்கிரிசாமி, செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.