கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை

அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.
கைபந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் கோப்பை வழங்கிய காட்சி.
கைபந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் கோப்பை வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

திருக்கனூரை அடுத்த கே.ஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கழகம் சார்பில் 15-ம் ஆண்டு கைப்பந்து போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது.

புதுவை, தமிழகத்தை சேர்ந்த 35 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். திருநாவுக்கரசு வரவேற்றார். செந்தில் வாழ்த்தி பேசினார்.

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.

விழுப்புரம் ராஜு பிரெண்ட்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ 25 ஆயிரமும், கோப்பையும், 2-வது பரிசாக கேஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கிளப் அணிக்கு ரூ 22 ஆயிரமும், 3-வது பரிசாக மயிலாடு துறை அணிக்கு ரூ.18 ஆயிரமும், 4-வது பரிசாக புதுகுப்பம் கே.ஜி. பிரெண்ட்ஸ் அணிக்கு ரூ. 15 ஆயிரமும், 5-வது பரிசாக வாதானூர் அணிக்கு. ரூ. 12 ஆயிரமும், 6-வது பரிசாக நரேஷ் பிரெண்ட்ஸ் அணிக்கு

விழாவில் பா.ஜனதா நிர்வாகிகள் கலிய பெருமாள், செல்வகுமார், கண்ணன், பாலச்சந்தர், காமராஜ், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அருள்குமார், வினோத், ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com