search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Meteorological Department"

    • கடந்த மாதத்தில் கரூர், ஈரோட்டில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
    • இந்த மாதத்திலும், அடுத்த மாதத்திலும் இயல்பைவிட சற்று வெப்பம் அதிகரித்து இருக்கும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி, வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் கரூர், ஈரோட்டில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. மற்ற இடங்களில் 100 டிகிரியை ஒட்டி பதிவாகியது.

    இந்த நிலையில் கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சராசரியாக பதிவான வெயில் அளவு குறித்த புள்ளி விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டு இருந்தது.

    அதில் கடந்த மாதத்தில் ஈரோட்டில் அதிகபட்ச வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் மட்டும் சராசரியாக 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது.

    அதற்கு அடுத்ததாக கரூரில் சராசரியாக 98.78 டிகிரி (37.1 செல்சியஸ்), சேலம் மற்றும் மதுரையில் சராசரியாக 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்), அதனைத்தொடர்ந்து திருச்சி, திருப்பத்தூர், பாளையங்கோட்டை, கோவை, வேலூர், தர்மபுரி, திருத்தணி, தஞ்சாவூர் உள்பட மாவட்டங்களில் 90 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. குறைந்தபட்சமாக ஊட்டியில் சராசரியாக 71.24 டிகிரி (21.8 செல்சியஸ்), கொடைக்கானலில் சராசரியாக 65.84 டிகிரி (18.8 செல்சியஸ்) பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த மாதத்திலும், அடுத்த மாதத்திலும் இயல்பைவிட சற்று வெப்பம் அதிகரித்து இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

    மழையை பொறுத்தவரையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும்.
    • சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 12 சென்டிமீட்டரும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 11 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, மேமாத்தூர் பகுதிகளில் 10 சென்மீட்டர் மழை பெய்துள்ளது. 

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. #ChennaiMeteorologicalDepartment
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி திருச்சி மாவட்டம் வாலாடியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், முகையூரில் 8 செ.மீ., பாடலூரில் 6 செ.மீ., நன்தியாரில் 5 செ.மீ., முசிறி மற்றும் விழுப்புரத்தில் 4 செ.மீ., சத்தியமங்கலம், அரூர், சமயபுரம், பூண்டி, செட்டிக்குளம், வென்பவூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., துறையூர், வந்தவாசி, தாமம்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., திருச்சி, உளுந்தூர்பேட்டை, பவானி, உத்திரமேரூர், கொல்லி மலை, லால்குடி, மதுராந்தகம், பாப்பிரெட்டிப்பட்டி, புல்லம்பாடி, ஊத்தங்கரை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    இந்த நிலையில் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. #ChennaiMeteorologicalDepartment

    கிழக்கு மத்திய வங்க கடலில் நிலைகொண்ட புயல் சின்னம் ஒடிசாவை நாளை கடப்பதால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Storm
    சென்னை:

    கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயல் சின்னமானது இன்று காலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.

    தற்போது ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கில் 360 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயல் சின்னமானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கலிங்கபட்டினத்துக்கும், கோபால் பூருக்கும் இடையே பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக ஆந்திரா-ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும். மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். நாளை 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.

    மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் புயல் சின்னத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


    புயல் சின்னம் காரணமாக சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்றும் பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    நேற்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் திடீர் என்று உள்வாங்கியது.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 4 செ.மீ. மழையும், இளையாங்குடி, கோவி லாங்குளம், வாணியம்பாடி, திருமங்கலம், மதுரை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும், திருச்சுழி, திருப்புவனம், அரிமலம், கடலாடி, முதுகுளத்தூர், வால்பாறையில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது. #Storm #Fisherman
    ×