என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Meteorological Department"
- சென்னையில் அதிகபட்சமாக துரைபாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
- தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையில் பரவலாக அதிகாலே முதலே மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக துரைபாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, மடிப்பாக்கத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பள்ளிக்கரணை, பாரீஸ், அடையார் பகுதிகளில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும்.
சென்னை:
தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதாவது 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அதிகமாக காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி வரை இருக்கும். ஆந்திரபிரதேச கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே நேரத்தில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். இதனால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.
தமிழகத்தில் நேற்று திருத்தணியில் அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரையில் 101.3 டிகிரி, ஈரோட்டில் 101.1 டிகிரி கொளுத்தியது.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை மாவட்டம் மேலூர், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினா விளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனி க்கோட்டை, மதுரை மாவட்டம் பெரியபட்டி, தானியமங்கலத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கடந்த மாதத்தில் கரூர், ஈரோட்டில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
- இந்த மாதத்திலும், அடுத்த மாதத்திலும் இயல்பைவிட சற்று வெப்பம் அதிகரித்து இருக்கும்.
சென்னை :
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி, வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் கரூர், ஈரோட்டில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. மற்ற இடங்களில் 100 டிகிரியை ஒட்டி பதிவாகியது.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சராசரியாக பதிவான வெயில் அளவு குறித்த புள்ளி விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டு இருந்தது.
அதில் கடந்த மாதத்தில் ஈரோட்டில் அதிகபட்ச வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் மட்டும் சராசரியாக 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்ததாக கரூரில் சராசரியாக 98.78 டிகிரி (37.1 செல்சியஸ்), சேலம் மற்றும் மதுரையில் சராசரியாக 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்), அதனைத்தொடர்ந்து திருச்சி, திருப்பத்தூர், பாளையங்கோட்டை, கோவை, வேலூர், தர்மபுரி, திருத்தணி, தஞ்சாவூர் உள்பட மாவட்டங்களில் 90 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. குறைந்தபட்சமாக ஊட்டியில் சராசரியாக 71.24 டிகிரி (21.8 செல்சியஸ்), கொடைக்கானலில் சராசரியாக 65.84 டிகிரி (18.8 செல்சியஸ்) பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த மாதத்திலும், அடுத்த மாதத்திலும் இயல்பைவிட சற்று வெப்பம் அதிகரித்து இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
மழையை பொறுத்தவரையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.
- சென்னையில் ஒரு சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தென் மேற்கு பருவ மழையானது கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழையானது கேரளாவை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 12-20 செ.மீ மழை பொழிய வாய்ப்பு உள்ளதால், 2-வது நாளாக இன்றும் ஆரஞ்சு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
- நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்
- மழையுடன் இடி-மின்னலும் 40 முல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதுவரையில் இயல்பைவிட 125 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மழையுடன் இடி-மின்னலும் 40 முல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (27-ந்தேதி) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 28-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 36 செல்சியசை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 27-28 செல்சியசை ஒட்டியும் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அடுத்த 5 கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விட பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பகல் நேர வெப்பநிலை சற்றே அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வலைகுடா பகுதிகளில் 55 கி.மீ வரை காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும்.
- சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 12 சென்டிமீட்டரும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 11 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, மேமாத்தூர் பகுதிகளில் 10 சென்மீட்டர் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி திருச்சி மாவட்டம் வாலாடியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், முகையூரில் 8 செ.மீ., பாடலூரில் 6 செ.மீ., நன்தியாரில் 5 செ.மீ., முசிறி மற்றும் விழுப்புரத்தில் 4 செ.மீ., சத்தியமங்கலம், அரூர், சமயபுரம், பூண்டி, செட்டிக்குளம், வென்பவூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., துறையூர், வந்தவாசி, தாமம்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., திருச்சி, உளுந்தூர்பேட்டை, பவானி, உத்திரமேரூர், கொல்லி மலை, லால்குடி, மதுராந்தகம், பாப்பிரெட்டிப்பட்டி, புல்லம்பாடி, ஊத்தங்கரை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
இந்த நிலையில் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. #ChennaiMeteorologicalDepartment
கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயல் சின்னமானது இன்று காலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கில் 360 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் சின்னமானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கலிங்கபட்டினத்துக்கும், கோபால் பூருக்கும் இடையே பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா-ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும். மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். நாளை 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் சின்னம் காரணமாக சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்றும் பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நேற்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் திடீர் என்று உள்வாங்கியது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 4 செ.மீ. மழையும், இளையாங்குடி, கோவி லாங்குளம், வாணியம்பாடி, திருமங்கலம், மதுரை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும், திருச்சுழி, திருப்புவனம், அரிமலம், கடலாடி, முதுகுளத்தூர், வால்பாறையில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது. #Storm #Fisherman






