என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொத்து கொத்தாக இறந்துபோகும் காகங்கள்... கையால் தொடாதீர்கள் என மக்களுக்கு எச்சரிக்கை
- செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இறந்து போன காகங்களின் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம் எனவும் கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story






