என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

VIDEO: திருவொற்றியூர் படகு குழாமை திறந்து வைத்து வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா
- எண்ணூரில் உள்ள குட்டையை குளமாக மாற்றி சென்னை மாநகராட்சி படகுக் குழாம் அமைத்துள்ளது.
- படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
சென்னை எண்ணூரில் உள்ள குட்டையை குளமாக மாற்றி சென்னை மாநகராட்சி படகுக் குழாம் அமைத்துள்ளது.
இந்த படகுக் குழாமில் மேயர் பிரியா வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
Next Story






