search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில்  குடிபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் உடல் கருகினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் குடிபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் உடல் கருகினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • போதையில் டிரான்ஸ்பார்மரில் ஏரி வயரை பிடித்து இழுத்ததால் தீப்பிடித்து தூக்கிவீசப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • படுகாயமடைந்த வாலிபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர் சிலை அருகே இன்று காலை 3 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் குடிபோதையில் சத்தம் போட்டபடி இருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை விசாரித்தபோது சரிவர பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் தமிழகத்தில் வடமாநில வாலிபர்கள் யாரும் இருக்ககூடாது. தமிழருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர்களை வெளியேற்றவேண்டும் என கூறினார். மேலும் அங்கிருந்த பேரிகார்டுகளை கீழே தள்ளி சாலையில் அமர்ந்து சத்தம்போட்டார். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிய பஸ்களும் செல்ல முடியாமல் நின்றன.

    உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அவரிடம் விசாரித்தனர். அப்போதும் அவர் சத்தம்போட்டபடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி கூச்சலிட்டார். உடனடியாக அவரை இறங்குமாறு போலீசார் எச்சரித்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மின்இணைப்பை துண்டிக்குமாறு கூறினர்.

    ஆனால் அதற்குள் அங்கிருந்த வயரை பிடித்து இழுத்ததால் தீப்பிடித்து தூக்கிவீசப்பட்டார். மேலும் பஸ்நிலைய சுற்றுவட்டார பகுதி முழுவதும் மின்வினியோகமும் தடைபட்டது.

    பின்னர் படுகாயமடைந்த அந்த வாலிபரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவர் தருமத்துப்பட்டி கோம்பை பகுதியை சேர்ந்த சடையாண்டி மகன் வேல்முருகன்(20) என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படுகாயமடைந்த வேல்முருகன் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×