என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » man arrest
நீங்கள் தேடியது "man arrest"
சினிமா தியேட்டரில் அருகே இருந்த வாலிபரை பார்த்து கவர்ச்சியாக பார்த்த சந்தேகத்தில் மனைவியின் தலையை சுத்தியால் அடித்தும், அரிவாளால் துண்டாக்கியதால் கணவர் கைது செய்யப்பட்டார்.
கொழிஞ்சாம்பாறை:
தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவரது மனைவி காளியம்மாள் (45). இவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முக்கோலைகால் என்ற இடத்தில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சாமி-2 படம் பார்க்க சென்றனர். படம் பார்த்தபோது காளியம்மாள் அங்கிருந்த வாலிபரை பார்த்து சிரித்தாகவும், கவர்ச்சி பார்வை பார்த்ததாகவும் மாரியப்பன் நினைத்தார். ஆனால் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் படம் பார்த்தார்.
சினிமா முடிந்த பின்னர் இருவரும் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்தபோது சிரிப்பு, கவர்ச்சி பார்வை குறித்து கேட்டார். அப்போது காளியம்மாள் மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி ஓங்கி 4 முறை அடித்தார்.
இதில் காளியம்மாள் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தலை பிளந்து ரத்தம் வழிந்தபின்னரும் ஆத்திரம் தீராத மாரியப்பன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து உயிருக்கு போராடிய மனைவியின் கழுத்தை வெட்டி துண்டாக்கினார். பின்னர் சுத்தியல் மற்றும் அரிவாளை நன்றாக கழுவி விட்டு மேஜை மீது வைத்தார்.
அதன் பின்னர் குளித்து விட்டு புதிய ஆடை அணிந்து கொண்டு எதுவும் நடக்காதது போல் திருவனந்தபுரத்தில் இருந்து செங்கோட்டை, நாகர் கோவில் வழியாக சென்றுவிட்டார்.
இது குறித்து திருவனந்தபுரம் பேரூர்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன்னை தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லையில் வைத்து மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவரது மனைவி காளியம்மாள் (45). இவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முக்கோலைகால் என்ற இடத்தில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சாமி-2 படம் பார்க்க சென்றனர். படம் பார்த்தபோது காளியம்மாள் அங்கிருந்த வாலிபரை பார்த்து சிரித்தாகவும், கவர்ச்சி பார்வை பார்த்ததாகவும் மாரியப்பன் நினைத்தார். ஆனால் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் படம் பார்த்தார்.
சினிமா முடிந்த பின்னர் இருவரும் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்தபோது சிரிப்பு, கவர்ச்சி பார்வை குறித்து கேட்டார். அப்போது காளியம்மாள் மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி ஓங்கி 4 முறை அடித்தார்.
இதில் காளியம்மாள் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தலை பிளந்து ரத்தம் வழிந்தபின்னரும் ஆத்திரம் தீராத மாரியப்பன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து உயிருக்கு போராடிய மனைவியின் கழுத்தை வெட்டி துண்டாக்கினார். பின்னர் சுத்தியல் மற்றும் அரிவாளை நன்றாக கழுவி விட்டு மேஜை மீது வைத்தார்.
அதன் பின்னர் குளித்து விட்டு புதிய ஆடை அணிந்து கொண்டு எதுவும் நடக்காதது போல் திருவனந்தபுரத்தில் இருந்து செங்கோட்டை, நாகர் கோவில் வழியாக சென்றுவிட்டார்.
இது குறித்து திருவனந்தபுரம் பேரூர்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன்னை தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லையில் வைத்து மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் கிளேனர் (வயது 33). இவரது மனைவி ஆரோக்கிய மேரி (வயது 28).இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று நள்ளிரவும் ஜான் கிளேன ருக்கும், ஆரோக்கிய மேரிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கிளேனர், திடீரென அங்கு இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆரோக்கியமேரி இறந்தார்.
மனைவி இறந்ததால் ஜான் கிளேனர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் ஆரோக்கிய மேரி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஆரோக்கிய மேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மனைவியை கழுத்து அறுத்து கொன்ற ஜான் கிளேனரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் கிளேனர் (வயது 33). இவரது மனைவி ஆரோக்கிய மேரி (வயது 28).இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று நள்ளிரவும் ஜான் கிளேன ருக்கும், ஆரோக்கிய மேரிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கிளேனர், திடீரென அங்கு இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆரோக்கியமேரி இறந்தார்.
மனைவி இறந்ததால் ஜான் கிளேனர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் ஆரோக்கிய மேரி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஆரோக்கிய மேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மனைவியை கழுத்து அறுத்து கொன்ற ஜான் கிளேனரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X