search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lula"

    மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BrazilElection #PresidentLula
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் தற்போது மிச்செல் டெமர் அதிபராக உள்ளார். அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலில், தற்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அதிபர் லுலா (வயது 72) போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் தண்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை செய்துவிட்டது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்டார். அவர் தனது தொழிலாளர் கட்சி சார்பில் பெர்னாண்டோ ஹத்தாத் என்பவரை களம் இறக்குகிறார். இது குறித்து சிறையில் இருந்தவாறு அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அக்டோபர் 7-ந் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. பெர்னாண்டோ ஹத்தாத் எனது பிரதிநிதியாக தேர்தல் களத்தில் இருப்பார். நமது வேட்பாளர் பெர்னாண்டோ ஹத்தாத்” என கூறி உள்ளார்.

    ஏற்கனவே சமூக தாராளவாத கட்சி வேட்பாளர் ஜெயிர் போல்சொனரோ (63), கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #BrazilElection #PresidentLula
    பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லுலா போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #Brazil #PresidentialElection #Lula
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் அடுத்த மாதம் (அக்டோபர்) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலா (வயது 72) விரும்புகிறார். அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

    ஆனால் இவர், அரசு எண்ணெய் கம்பெனியின் பணி ஒப்பந்தம் வழங்குவதற்கு ஒரு என்ஜினீயரிங் கம்பெனியிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இந்தநிலையில் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு நேற்று தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர், தேர்தலில் நிற்க முடியாது என அந்த கோர்ட்டு கூறி விட்டது.

    ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லுலாவின் வக்கீல்கள் குழு அறிவித்து உள்ளது.

    இதே போன்று லுலாவின் தொழிலாளர் கட்சி கருத்து தெரிவிக்கையில், “லுலா அதிபர் தேர்தலில் நிற்பதற்காக எல்லா விதத்திலும் போராடுவோம்” என கூறியது. மேலும் லுலாவுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி போராடப்போவதாகவும் கூறி உள்ளது.  #Brazil #PresidentialElection #Lula 
    ×