search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maldives Election"

    மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி அமோக வெற்றிப்பெற்றது. #MaldivesElection #PresidentParty #MohamedNasheed
    மாலே:

    இந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாடு மாலத்தீவு. அங்கு நீண்டகால ராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2008-ம் ஜனநாயக முறைப்படி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மாலத்தீவு ஜனநாயக கட்சியின் (எம்.டி.பி.) தலைவர் முகமது நஷீத் வெற்றிப்பெற்று அதிபரானார்.

    ஆனால், பொதுமக்கள் போராட்டம் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக பதவி காலம் முடியும் முன்னரே 2012-ம் ஆண்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதன்பின்னர் 2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முற்போக்கு கட்சியை சேர்ந்த அப்துல்லா யாமீன் வெற்றிப்பெற்று அதிபரானார்.

    இவரது ஆட்சிக்காலத்தில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தொடர்பு புகாரில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் 2016-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேறப்பட்டார்.

    இதற்கிடையில், கடந்த ஆண்டு அங்கு மீண்டும் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து எம்.டி.பி. கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி களம் இறங்கினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முகமது சோலி அமோக வெற்றிப்பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டதும், முகமது நஷீத் நாடு திரும்பினார்.

    இந்த நிலையில், 87 இடங்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.

    இதனால் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 70 முதல் 80 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி மற்றும் மற்றொரு முன்னாள் அதிபரின் அப்துல்லா யாமீனின் முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது.

    ஆனால் எம்.டி.பி. கட்சி 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றது. அதவாது முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதே சமயம் அந்நாட்டு ஊடகங்கள் எம்.டி.பி. கட்சி 68 இடங்களில் வெற்றிப்பெற்றதாக செய்திகள் வெளியிட்டன. இறுதி முடிவுகள் வெளிவந்த பின்னரே இது உண்மையா என்பது தெரியவரும்.

    தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர் முகமது நஷீத் “இந்த முடிவுகள் மாலத் தீவில் ஜனநாயகத்தை உறுதிப் படுத்த வழி வகுக்கும்” என கூறினார்.  #MaldivesElection #PresidentParty #MohamedNasheed
    மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே விறுவிறுப்பாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக்கடமையை ஆற்றினர். #Maldives
    மாலே:

    87 இடங்களைக் கொண்டுள்ள மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அங்கு அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் பதவி பறிப்புக்கு பின்னர் நடந்த தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதேபோன்று மற்றொரு முன்னாள் அதிபரான முகமது நஷீத், தலைமறைவு வாழ்க்கையை முடித்து நாடு திரும்பிய நிலையில் இந்த தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தலில் அவர் முக்கிய வேட்பாளராக உள்ளார்.386 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே விறுவிறுப்பாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக்கடமையை ஆற்றினர்.

    அதிபர் முகமது சோலி காலை 10.15 மணிக்கு தலைநகர் மாலேயில் உள்ள ஜமாலுதீன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட்டார். அதைத்தொடர்ந்து வாக்காளர்கள் திரளாக வந்து வாக்கு அளிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார். இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த தேர்தல் மாலத்தீவில் மட்டுமல்லாது அந்த நாட்டினர் வசிக்கிற இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நடந்துள்ளது.  #Maldives
    மாலத்தீவு தேர்தல் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அதிபர் மனு செய்துள்ளதை அடுத்து அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AbdullaYameen
    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

    அதை யாமீன் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடத்தி வெற்றி பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மாலத்தீவு தேர்தல் கமி‌ஷன் மறுத்துள்ளது.

    தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. அதனால் 89.2 சதவீதம் ஓட்டுகள் பதிவானது என தெரிவித்துள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலம் யாமீன் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும். புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக் வருகிற நவம்பர் 17-ந்தேதி பதவி ஏற்க வழிவிட வேண்டும்.

    அதற்கு மாறாக தேர்தல் வெற்றியை எதிர்த்து மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.



    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலே நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #AbdullaYameen
    ஐரோப்பிய நாடுகளின் தொடர் வற்புறுத்தலுக்கு இணங்க, மாலத்தீவு அதிபர் பதவிக்கு செப்டம்பர் 23-ம் தேதி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. #Maldivespresidentialelection
    மாலே:

    ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவின் முதல் அதிபர் முஹம்மது நஷீத்தின் ஆட்சி கடந்த 2012-ம் ஆண்டில் நடைபெற்ற போலீஸ் கலகத்தால் வீழ்த்தப்பட்டது. பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நஷீத், 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு காவலில் அடைக்கப்பட்டார்.

    சில வெளிநாடுகளில் அழுத்தத்துக்கு இணங்கி, உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற பிரிட்டன் நாட்டுக்கு அவர் செல்ல கடந்த 2016-ம் ஆண்டு மாலத்தீவு அரசு அனுமதி அளித்தது. பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்ட முஹம்மது நஷீத் தற்போது இலங்கையில் தங்கியுள்ளார். 

    இதற்கிடையில், சுமார் 4 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாலத்தீவு நாட்டில் ஜனநாயக முறைப்படி அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் உள்நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு நியாயமான முறையில் அங்கு தேர்தலை நடத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளும் அழுத்தம் தந்து வந்தன.

    இந்த தேர்தலில் மாலத்தீவு குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் நஷீத் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை யாமீன் அப்துல்லா தலைமையிலான அரசு சமீபத்தில் நிராகரித்து விட்டது.

    எதிர்வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக தற்போதைய அதிபர் யாமீன் அப்துல்லா அறிவித்துள்ள நிலையில் மாலத்தீவு அதிபர் பதவிக்கு வரும் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அஹமது ஷரீப் நேற்று அறிவித்துள்ளார்.

    இந்த தேர்தல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அரசியல் வல்லுனர்கள் தேர்தல் மேற்பார்வையாளர்களாக இடம்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். #Maldivespresidentialelection
    ×