என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sentenced to life imprisonment"

    • ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.
    • பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தென் கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக்யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மணி நேரங்களிலேயே ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இந்த விவகாரத்தால் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் மீதான வழக்கில் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்தது. அதில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் யூன் சுக் யோல் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.

    இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. யூன் சுக் யோல் சட்டவிரோத முயற்சியில் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளைத் திரட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதாக நீதிபதி ஜீ குய்-யோன் தனது தீர்ப்பில் கூறினார்.

    ஏற்கனவே அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறியது போன்ற பிற குற்றச்சாட்டுகளுக்காக யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலத்தில் 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ராஜ் பல்லப் யாதவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #RJDMLA #RajballabhYadav #RajballabhYadavconvicted
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ்.  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்தார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, மயக்கி, பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடன் சுலேகாவின் தாய் ராதா தேவி, சோட்டி குமாரி, துளசி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையில், ராஜ்பல்லப் யாதவை கட்சியில் இருந்து நீக்கியதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்தார். தலைமறைவாக இருந்த ராஜ்பல்லப் யாதவை பின்னர் போலீசார் கைது செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

    சுமார் இரண்டாண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 15-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, ராஜ்பல்லப் யாதவ் உள்பட 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

    ராஜ்பல்லப் யாதவுக்கு ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பரசுராம சிங் யாதவ் உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனையும், இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. #RJDMLA #RajballabhYadav #RajballabhYadavconvicted 
    ×