search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 years prison"

    • கொலை வழக்கில் மாட்டு வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    • இதில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

    தேனி:

    கம்பம் அருகே சுருளிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த மாட்டு வியாபாரி காரமணி(58). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதேபகுதியில் தனது மோட்டார் சைக்கிளை பாதையை மறித்து நிறுத்தினார். இதனை கூலித்தொழிலாளி அய்யாதுரை என்பவர் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் அய்யாத்துரையின் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளியதில் அவர் பேச்சுமூச்சில்லாமல் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அய்யாத்துைரயை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து காரமணியை கைது செய்தனர்.

    10 ஆண்டு சிறை

    இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா காரமணிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சரவணன், நீதிமன்ற காவலர் கிறிஸ்துராணி ஆகியோரை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் ேடாங்கரே பாராட்டினார்.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் அதிபர் ஆன்டனியோ சாகாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. #ElSalvadorPresident #AntonioSaca
    சான்சல்வடார்:

    மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் நாட்டில் 2004-2009 ஆண்டுகளில் அதிபராக பதவி வகித்தவர், ஆன்டனியோ சாகா (வயது 53). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.



    இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தனது மகன் திருமணத்தின்போது 2016 அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என கண்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த நாட்டு அரசுக்கு 260 மில்லியன் டாலர் தொகையை (சுமார் ரூ.1,872 கோடி) அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஊழலில் சிக்கிய ஆன்டனியோ சாகா அரசு உயர் அதிகாரிகள் 6 பேருக்கு தலா 3 ஆண்டு முதல் 16 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.   #ElSalvadorPresident #AntonioSaca
    ×