என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Works Department"

    • மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
    • இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது.

    மதுரையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார். ரூ.150 கோடி மதிப்பிட்டீல் மதுரை மேலமடையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    மக்களின் நீண்ட கோரிக்கையையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    டிசம்பர் 7-ம் தேதி மதுரை மேலமடையில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் ஜனவரியில் முடிக்கப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படாததால் விபத்துகள் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் உள்ள வளைவுகளில் அமெரிக்கா தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. பாலங்களின் வளைவுகளால் மட்டுமே விபத்துகள் நடைபெறுகிறது.

    மதுரை தெற்குவாசல்- வில்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வு முடிவுகளின் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.

    பொதுப்பணித்துறையில் லஞ்சம் பெற்றதாக உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் பல்வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆதாரப்பூர்வமாக புகார்கள் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.

    இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 8 முறை நடைபெற்றுள்ளதால் எஸ்.ஐ.ஆர்.ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கவில்லை.

    எஸ்.ஐ.ஆர்.ஐ மேற்கொள்ள காலமும் நேரமும் போதாது என்பதைத்தான் கூறுகிறோம். வடகிழக்கு பருவமழை, பொங்கல் விழா, தேர்தல் தேதி அறிவிப்பு இருப்பதால் தற்போது எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளக் கூடாது என கூறுகிறோம்.

    கொளத்தூரில் கள்ள ஓட்டுக்கள் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினாரா? அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒன்றை பேசி வருகிறார்.

    நாங்கள் எதை சொன்னாலும் அதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர் கருத்துதான் கூறுவார். இந்தியாவில் உள்ள அனைவரும் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்த்து கருத்து சொல்லும்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் ஆதரித்து கருத்து சொல்வது ஏதற்காக?

    பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளதால் அதன் செயல்பாடுகளுக்கு ஒத்து ஊதுகிறது. தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சராக ஓ.பி.எஸ். பதவி வகித்துள்ளார்.

    மனோஜ் பாண்டியனுக்கு புரியாமலா தி.மு.க.விற்கு வந்திருப்பார். தமிழக அரசியலில் அண்ணா, பெரி யார் வகுத்துக் கொடுத்த திராவிட கொள்கையை கலைஞர் நிறைவேற்றினார்.

    அதனையே மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். திராவிட கொள்கையை தி.மு.க. மட்டும் தான் கடைப்பிடிப்பதால் பிற கட்சிகளில் இருந்து தி.மு.க.விற்கு வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி சங்கி கொள்கையை தாங்கி பிடிக்கிறார். அதனால்தான் அ.தி.மு.க.விலிருந்து, தி.மு.க.விற்கு வருகிறோம் என செல்கிறார்கள். தி.மு.க.விற்கு வருபவர்கள் அதன் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருகி றார்கள்.

    திராவிட மாடல் ஆட்சி யில் ஏழை, எளிய மக்க ளுக்காக முதலமைச்சர் திட்டங்களை தீட்டி செயல்ப டுத்துவதால் தி.மு.க.வில் இணைகிறார்கள். தி.மு.க. விற்கு நீண்ட காலமாக உழைப்பவர்களுக்கு பதவி கள் வழங்கப்பட்டுள்ளது.

    துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு என தி.மு.க.விற்கு உழைத்த வர்களுக்கு பதவி வழங்கப் பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் திறமை உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்வார். திறமை உள்ளவர்கள் தி.மு. க.வில் உள்ளவர்களா? அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களா? என பார்க்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
    • ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தியது.

    புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    சிபிஐ நடத்திய விசாரணையில் ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    அரசு தங்கும் விடுதியில் விடிய விடிய தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று தொடர்ந் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது.
    • வாகனங்களை திருப்பிவிட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் முதல் அம்பகரத்தூர் வரை செல்லும் பிரதான சாலையின் குறுக்கே, பல்வேறு பெரிய பாலம் மற்றும் சிறிய பாலங்கள் உள்ளது. இத்தகைய பாலங்கள் வழியே கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தினசரி சென்று வருகின்றது. இவற்றில் பல சிறிய பாலங்கள் வலுவிழந்து காணப்படுவதால், சம்பந்த ப்பட்ட பாலங்களையும், பாலத்தை ஒட்டிய சாலைகளையும் சரி செய்யவேண்டும் என, பொதுமக்கள் கடந்த பல மாதமாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், மாவட்ட பொதுப்பணித்துறை இந்த புகார் குறித்து, கண்டும் கானாமல் இருந்துவந்தது. மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையை பாலஙக்ளை சரி செய்ய வலியுறுத்தவில்லை.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையில், அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது. இதன்காரணமாக, காரைக்கால் முதல் அம்பகரத்தூர், பேரளம், கும்பகோணம் வழியே போக்குவரத்து துண்டி க்கப்பட்டது. பொதுமக்கள் இறங்கி, வேறு வாகனங்களில் செல்லும் நிலை உருவானது. விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று, இடிந்த பாலத்தை ஆய்வு செய்து மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். பாலம் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பணித்துறை எடுத்து அணையை விரிவுபடுத்த வேண்டும்.
    • அணையின் கதவை திறந்தபின் அங்குள்ள சிலர் மூடி விடுகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன்பெறும் வகையில் உள்ள இந்த நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வரும் கீரனூர் அணைக்கட்டு பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கீரனூர் அணைக்கட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கு அணையின் மேற்கு பகுதியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அதை ஒப்பந்த அடிப்படையில் பொதுப்பணித்துறை எடுத்து அணையை விரிவு படுத்த வேண்டும். அணையின் கதவை திறந்தபின் அங்குள்ள சிலர் மூடி விடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அணைக்கு தண்ணீர் வரும் கால்வாயில் இப்பொழுது படித்திருக்கும் மணல், கோரை செடிகளை அகற்ற வேண்டும் .பொது ப்பணி துறை அமைச்சரிடம் பரிந்துரை செய்து இந்த ஆண்டு நிதியில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும் அவர்கள் பழைய கோரிக்கையான சாத்தனூர் அணை கால்வாயை நந்தன் கால் வாயுடன் இணைக்க முயற்சி மேற் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர். இவைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்தார். தொடர்ந்து அவர் அணைக்கட்டு பகுதி மற்றும் கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில் உள்ள கோரை புற்களை அகற்றி சரி செய்ய அறிவுறுத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் ராஜாராமன் மற்றும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தின் சுரேஷ், சேகர், வெற்றி தமிழ்ச்செல்வன், கன்னிகா ரமேஷ் உள்ளி ட்டோர்கலந்து கொண்டனர்.

    • 20-க்கும் மேற்பட்ட பகுதிகளின் தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது.
    • கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர 32-வது வார்டில் வசிக்கும் மக்கள் சார்பில் விழுப்புரம் கலெக்டருக்கு மனு அளித்தனர். அதில் உள்ளதாவது;- விழுப்புரம் நகராட்சி 32-வது வார்டிற்குட்பட்ட கவுதம் நகர், ஸ்ரீராம் நகர், வழுதரெட்டி காலனி, பாண்டியன் நகர், சாலாமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளின் தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த வாய்க்கால் தற்போது தூர்ந்து போய் இருப்பதால் வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு மேற்கண்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய சூழ்நிலை இருக்கிறது.

    கடந்த காலங்களில் பெய்த பருவமழையின் போது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் இன்ன ல்களுக்கு ஆளானார்கள். இது குறித்து கடந்த 2022ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. ஆகவே, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வடக்கிழக்கு பருவமழைக்கு முன்பாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால்களை தூர்வாரி வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று இரவும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 532 கனஅடியாக உயர்ந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் 22.19 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 3170 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதே போல் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீரு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2788 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 281 கனஅடியாக உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 174 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1886 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 38 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 437 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 15 கனஅடி நீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • நீர்மட்டம் 42 அடியை எட்டியது வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டது. எனவே காவிரி தண்ணீர் ஒரு மாதத்துக்கு பின் கடைமடை பகுதியான நாகூர்வரை சென்றது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் வழியாக கீழணைக்கு காவிரிநீர்வந்து சேரும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.

    இந்த ஆண்டு திறக்கப்பட்ட காவிரிநீர் கடந்த மாதம் வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. வடவாறு வழியாக 146 கனஅடிநீர் ஏரிக்கு வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 57 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி எப்போது பாசனத்துக்கு திறக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    இது குறித்து பொது பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். இதனிடையே வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுதவிர காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது வீராணம் ஏரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கும்பகோணம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாரதி கண்டன உரையாற்றினார். மேட்டூர் அணை 3 முறை நிரம்பியும் கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கும்பகோணத்தில் 35-க்கு மேல் உள்ள குளங்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் விடாததால் வறண்டு கிடக்கிறது.

    இதனை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. தமிழக அரசு கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 8 இடங்களில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகள் செய்வதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் எந்த வேலையும் நடக்கவில்லை. எனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை மோசடி நடந்துள்ளது.

    எனவே இதில் தொடர்புடைய பொதுப் பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தஞ்சை மாவட்டத்திற்கு குடிமராமத்து பணிகளுக்கு ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது அதில் கும்பகோணத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது 8 பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது ஆனால் அதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #tamilnews
    ×