search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic impact"

    • விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிராக்டர் டிப்ப ரின் ஹைட்ராலிக் திடீரென ரிலீசானது.
    • பஸ் நிலையம் அருகில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்

    கொய்யா மரகட்டை களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் இன்று காலை 7.30 மணிக்கு முண்டியம்பாக்கம் நோக்கி சென்றது. இந்த டிராக்டரை விக்கிரவாண்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். டிராக்டர் விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிராக்டர் டிப்ப ரின் ஹைட்ராலிக் திடீரென ரிலீசானது. இதனால் டிப்பர் மேலே தூக்கியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தலை கீழாக கவிழ்ந்தது.

    விபத்தில் டிராக்டர் டிரைவர் நாகராஜ்க்கு படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்பு ரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அலுவ லர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை யில் கவிழ்ந்த கிடந்த டிராக்டர் டிப்பரை அகற்றி னர். இதனால் விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என் பாளையம், விளாமுண்டி, ஆசனூர், தலமலை, தாளவாடி, கடம்பூர், கெட்டவாடி, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இதில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வரும் யானைகள் சாலையில் நிற்பதும், கரும்புலோடு ஏற்றி வரும் லாரியை மறித்து கரும்புகளை ருசிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. யானைகள் சாலை நடுவே நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் அருகே 3 காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். யானை கூட்டம் ஆனது சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே நின்றது.

    இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு 3 யானைகள் மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து சென்றது. பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.

    • அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது.
    • வாகனங்களை திருப்பிவிட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் முதல் அம்பகரத்தூர் வரை செல்லும் பிரதான சாலையின் குறுக்கே, பல்வேறு பெரிய பாலம் மற்றும் சிறிய பாலங்கள் உள்ளது. இத்தகைய பாலங்கள் வழியே கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தினசரி சென்று வருகின்றது. இவற்றில் பல சிறிய பாலங்கள் வலுவிழந்து காணப்படுவதால், சம்பந்த ப்பட்ட பாலங்களையும், பாலத்தை ஒட்டிய சாலைகளையும் சரி செய்யவேண்டும் என, பொதுமக்கள் கடந்த பல மாதமாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், மாவட்ட பொதுப்பணித்துறை இந்த புகார் குறித்து, கண்டும் கானாமல் இருந்துவந்தது. மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையை பாலஙக்ளை சரி செய்ய வலியுறுத்தவில்லை.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையில், அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது. இதன்காரணமாக, காரைக்கால் முதல் அம்பகரத்தூர், பேரளம், கும்பகோணம் வழியே போக்குவரத்து துண்டி க்கப்பட்டது. பொதுமக்கள் இறங்கி, வேறு வாகனங்களில் செல்லும் நிலை உருவானது. விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று, இடிந்த பாலத்தை ஆய்வு செய்து மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். பாலம் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகாரிகளிடம் பல முறை புகார்
    • மழையால் சாலையில் அரிப்பு காரணமாக பள்ளம்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் ஒத்தவாடை தெரு அருகே குறுகலாக உள்ள பகுதியின் வழியே பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.

    சாலையின் குறுக்கே மழை நீர் செல்வதற்காக சரிவாக சாலை அமைத்து இருப்பதாக கூறப்படும் இடத்தில் அவ்வப்போது வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சாலையில் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை மின்னல் நோக்கி வந்த தனியார் பஸ் சக்கரம் அந்த பள்ளத்தில் சிக்கியது. சம்பவ இடத்திற்கு வந்த அரக் கோணம் ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரசாத், மின்னல் ஊராட்சி மன்ற தலைவர் கோபி மற்றும் பொது மக்களும் சரி செய்தனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • சூறை காற்றுடன் மழை.
    • போக்குவரத்து பாதிப்பு.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலையில் தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இது சுற்றுலா தலம் என்பதால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இதனால் இரவு நேரங்களிலும் பகல் நேரத்தில் மலைச் சாலையில் வாகனங்களின் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சூறைக் காற்று வீசியதால் 9 வது கொண்டை ஊசி வளைவு மலைச்சாலையில் சாலையோரம் இருந்த பெரிய மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. மேலிருந்து கீழே வரும் வாகனங்களும் கீழிருந்து மேலே வரும் வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் இதுகுறித்து தகவலறிந்த ஏலகிரி மலை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் துணைத்தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை சுமார் அரை மணி நேரம் போராடி வெட்டி அகற்றினர்.

    அதன்பிறகு அணிவகுத்து நின்ற வாகனங்களின் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மேலும் சாலையோரத்தில் வாகனங்கள் செல்வதற்காக தற்காலிகமாக நேற்று இரவு மரங்களை வெட்டி அகற்றி சீரமைத்தனர்.

    இன்று காலை திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சூறைக்காற்றுடன் மழை சாலையில் இருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் கிடந்த ஐஸ்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    புஜேரா :

    ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.

    பொதுவாக வானில் இருந்து மழைத்துளிகள் ஐஸ்கட்டிகளாக மாறி பொழிவது ‘ஆலங்கட்டி மழை’ அல்லது ஐஸ் கட்டிமழை எனப்படுகிறது. சாதாரண மழையோடு ‘ஆலங்கட்டிகள்’ விழுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை முழுவதுமாக ஐஸ்கட்டிகளாக விழுவதில்லை.

    ஆனால் நேற்று அமீரகத்தில் முதல்முறையாக ஒரு ‘கோல்ப்’ பந்து அளவில் ஐஸ்கட்டிகள் சடசடவென்று விழுந்தன. ஐஸ்கட்டிகள் விழுந்ததால் பயந்துபோன சிலர் ஒதுங்க இடம்தேடி ஓடி சென்றனர்.

    இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடுமாறின. சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர்.
    தஞ்சையில் லாரி மீது காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வந்த மினிலாரி மோதிய விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    திருச்சியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி திருத்துறைப்பூண்டி நோக்கி புறப்பட்டது. அந்த மினி லாரி இன்று அதிகாலை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் அருகே வந்தபோது முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மினிலாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. தகவலறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக போலீசார் சென்று மினிலாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் பல வார்டுகளில் 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    நேற்று பழனி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட நிலையில் இன்று 40 மற்றும் 41-வது வார்டுக்குட்பட்ட பொது மக்கள் காலிக்குடங்களுடன் குடைப்பாறைப்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஜிகா பைப்புகள் பொருத்தப்பட்டதால் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் 2 மாதமாக இதே நிலை தொடர்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    எனவே பழைய முறையிலேயே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வி, சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. #tamilnews
    மசினகுடி-தெப்பக்காடு சாலையில் காட்டுயானைகள் மரத்தை சாய்த்தன. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மசினகுடி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ளது முதுமலை புலிகள் காப்பகம். இங்குள்ள வனப்பகுதி தொடர் மழை காரணமாக பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் ஏராளமான காட்டுயானைகள் முதுமலைக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளன. இந்த காட்டுயானைகள் அவ்வப்போது சாலையோரங்களிலும் வந்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை மசினகுடி-தெப்பக்காடு சாலையில் காட்டுயானைகள் உலா வந்தன. அப்போது சாலையோரத்தில் இருந்த தேக்கு மரத்தை வேரோடு சாய்த்தன. தொடர்ந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தின் பட்டைகளை உரித்து தின்றன. பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

    இதையடுத்து காலை 6 மணிக்கு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் மரம் விழுந்து கிடப்பது குறித்து மசினகுடி போலீசார், வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். மசினகுடி சோதனைச்சாவடி அருகே தெப்பக்காடு சாலையில் விழுந்து கிடந்த மரத்தால், அந்த வழியே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் வெஸ்ட்புரூக் பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோரத்தில் இருந்த 2 சீகை மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

    இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) மோகன் தலைமையிலான வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் மின்வாள் மூலம் சாலையில் விழுந்த மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். இதனை தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து சீரானது.
    கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் மலைப்பகுதியில் ஒற்றை யானை சாலையை கடக்க நின்றது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்கு அருகிலுள்ள ஊருக்குள் புகுந்து வீடு, விளை நிலங்களை சேதம் செய்து வருகின்றன. சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டு விடுகிறது.

    இதற்காக வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி யானைகள் வருவது குறையவில்லை. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் காட்டு யானை ஒன்று அந்த பகுதியில் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்தும், அரிசி பருப்புகளை தின்றும் வருகிறது. இது குறித்து ஆதிவாசி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் மலைப்பகுதியில் ஒற்றை யானை சாலையை கடக்க நின்றது. அப்போது போக்குவரத்து அதிகமாக இருந்ததால் யானை சாலையை கடக்காமல் மலைப்பகுதிக்குள் திரும்பி சென்றது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த யானையை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×