என் மலர்
நீங்கள் தேடியது "Physical examination"
- சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளை செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
- எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.
திருப்பதி:
மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய ஒரு நாள் முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும். நிறைய ரத்த தானம் செய்ய வேண்டும். வரிசையில் காத்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதற்கு நிறைய நேரம் எடுக்கும் புதிய தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை வழங்குகின்றன.
டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே சாதனத்தைப் பயன்படுத்தி சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய ஒரு சுகாதார எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கிங்கோத்தியில் உள்ள மாவட்ட மருத்துவமனை மற்றும் மலக்பேட்டை பகுதி மருத்துவமனை ஆகியவற்றில் ஒரு முன்னோடி திட்டமாக இந்த எந்திரம் மாநில அரசு அமைத்துள்ளது
எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, லிப்பிட் ஹீமோகுளோபின், நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.
சில ரத்த பரிசோதனைகளுக்கு ரத்த மாதிரி எடுக்க வேண்டும். காது, தொண்டை மற்றும் மூக்கு பாகங்களை பரிசோதிக்கலாம். கண் பரிசோதனைகள் செய்யலாம்.
இது வெற்றி பெற்றால், மேலும் பல அரசு மருத்துவமனைகளில் இந்த எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என தெரிவித்தனர்.
- சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் மற்றும் டானிக் இலவசமாக வழங்கப்பட்டது.
- இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கார்குழலி அறக்கட்டளை, ஜிடி பவுண்டேசன், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், ஆலத்தம்பாடி மேம்படு த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கார்குழலி நிறுவனத் தலைவர் சுடர்விழி வரவேற்புரையாற்றினார். குழந்தைகள் நல மருத்து வர் ராஜா தலைமை தாங்கினார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தலைவர் முனைவர் துரை ராயப்பன் மற்றும் நல்நூலகர் ஆசைத்தம்பி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியை காவ ல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம்தொடக்கி வைத்து சிறப்புரையா ற்றினார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் .அ.பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர், சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், பள்ளி தலைமை யாசிரியர் தங்கராசு, ஆசிரியர் யோகராஜன், ஆசிரியர் கலைச்செல்வன், ஆதிரங்கம் ஊராட்சிமன்ற தலைவர் வீரசேகரன்.
நெடும்பலம் ஊராட்சிமன்ற துணை தலைவர் சதீஷ், பிவிசி.கீர்த்தி, கமல் கணேசன், ராய் டிரஸ்ட் கோவி.வேதகிருஷ்ணன் மற்றும் கார்குழலி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் டாக்டர். ராஜா, டாக்டர் சதாசிவம், டாக்டர் சவுந்தர்ய லெட்சுமி, டாக்டர் வர்ஷிகா ராஜா, டாக்டர் அபூர்வநிலா, டாக்டர் அரவிந்த் ஆகியோர்கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
அனைவருக்கும் ரத்த வகை, ஹீமோ குளோபின்,சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் ஆகியவை பரிசீலிக்க ப்பட்டு,அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் மற்றும் டானிக் இலவசமாக வழங்கப்பட்டது .இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற் றும் பொது மக்கள் கலந்துகொண்டு இலவச உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.கார்குழலி அறக்கட்டளை ராகேஷ் சர்மா நன்றி கூறினார்.






