என் மலர்
நீங்கள் தேடியது "ஐநா அறிக்கை"
- ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணையம், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலியப் படைகள் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இந்தப் போரில் இஸ்ரேல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு இனக்குழுவினரை குறிவைத்து கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, அந்த இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இஸ்ரேலிய தலைவர்களின் கருத்துகளும் இராணுவத்தின் செயல்களும் அவர்களின் இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல இஸ்ரேல் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.
- அட்டூழியங்களின் விகிதம் அளவிடத் தொடங்கியதிலிருந்து 30 ஆண்டுகளில் இது மிக உயர்ந்த விகிதமாகும்.
- தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இஸ்ரேல் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024 ஆம் ஆண்டில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆயுத மோதல்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விகிதம் முந்தைய ஆண்டை விட 2024 இல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 41,370 கடுமையான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
வன்முறையின் விகிதம் அளவிடத் தொடங்கியதிலிருந்து 30 ஆண்டுகளில் இது மிக உயர்ந்த விகிதமாகும். 2023 இல் இந்த அதிகரிப்பு 21 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு மோதல் மண்டலங்களில் 4,500 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 7,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
"படிக்கவும், கற்றுக்கொள்ளவும், விளையாடவும் வேண்டிய குழந்தைகள் இப்போது தோட்டாக்கள் மற்றும் குண்டுகளின் கீழ் எவ்வாறு உயிர்வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். இது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. குழந்தைகளுக்கு எதிரான கொடுமையில் நாம் மீள முடியாத கட்டத்தில் இருக்கிறோம்," என்று அறிக்கை கூறுகிறது.

உலகெங்கிலும் உள்ள 20 மோதல் மண்டலங்களில் குழந்தைகள் எதிர்கொள்ளும் அட்டூழியங்களை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் தனது இனப்படுகொலையைத் தொடரும் காசாவில் குழந்தைகள் அதிக வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு பாலஸ்தீனத்தில் 8,500 குழந்தைகள் கடுமையான வன்முறையை எதிர்கொண்டனர். லெபனானில் இஸ்ரேல் செய்த அட்டூழியங்கள் மற்றும் ஹைட்டியில் ஆயுதக் குழுக்கள் செய்த வன்முறை குறித்தும் அறிக்கை குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு கொலை, பாலியல் வன்கொடுமை, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அழித்தல் உள்ளிட்ட மொத்தம் 41,370 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பாலஸ்தீன பிரதேசங்களில் இஸ்ரேலால் செய்யப்பட்டவை. இது முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாகும். இதனால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இஸ்ரேல் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போன்ற பாலஸ்தீன அமைப்புகளும் வன்முறையில் ஈடுபட்டுள்ளன. பாலஸ்தீனத்திற்குப் பிறகு, காங்கோ, சோமாலியா, நைஜீரியா மற்றும் ஹைட்டியில் அதிக வன்முறை பதிவாகியுள்ளன.
- ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானது. இங்கு ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுஜன கண்காணிப்பை ஈரான் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

ஐ.நா அறிக்கையின்படி, ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் புகாரளிக்க காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது. இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.
மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
செப்டம்பர் 2024 முதல், ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக டிரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அறநெறிப் போலீசாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை மதிப்பிட்டுள்ளது.
- 2024-ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியாவும், சீனாவும் வலுவான வா்த்தக விரி வாக்கத்தை பெற்றுள்ளன.
- அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது.
ஐ.நா. வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சா்வதேச வா்த்தக தரவுகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024-ம் ஆண்டில் உலக அளவிலான வா்த்தகம் ரூ. 104 லட்சம் கோடி அளவுக்கு விரிவடைந்து சுமாா் ரூ. 2,869 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது. அதன்படி சேவைத் துறை வா்த்தகம் 9 சதவீத அளவுக்கும், சரக்கு வா்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் சா்வதேச அளவில் விரி வடைந்துள்ளது.
பல வளா்ந்த நாடுகள் வா்த்தகத்தில் சற்று சரிவைச் சந்தித்து வரும் சூழலில், வளரும் நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா சராசரியை விட சிறந்த வா்த்தக விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியாவும், சீனாவும் வலுவான வா்த்தக விரி வாக்கத்தை பெற்றுள்ளன.
இந்தியாவிலும், சீனா விலும் வா்த்தகம் அதிகரித் துள்ளது. குறிப்பாக ஏற்று மதி சராசரியைவிட அதி கரித்து காணப்பட்டது. தென் கொரியாவில் ஏற்று மதி வளா்ச்சி சரிந்திருந்த போதும் வருடாந்திர அடிப்படையில் வளா்ந்த நாடுகளில் வா்த்தக விரிவாக்கத்தில் முன்னிலை வகித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது. ஆனால் ஏற்றுமதி எதிா்மறை வளா்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தியாவில் சரக்கு வா்த்தகத்தில் இறக்குமதி 8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 6 சதவீதமாக இருந்தது. அதுபோல, சரக்கு வா்த்தகத்தில் ஏற்றுமதி வளா்ச்சி 7 சதவீத வளா்ச்சி யையும், வருடாந்திர அடிப்படையில் 2 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
உலக வா்த்தகம் 2025-ஆம் ஆண்டின் தொடக் கத்தில் நிலையானதாக இருக்கும்.
ஆனால் அதிகரித்து வரும் புவிசாா் பொருளா தார பதற்றங்கள், உலக நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்ளிட்ட வற்றால் வரும் காலாண்டு களில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதை காட்டுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் இந்தியா ஒரு இடம் முன்னேறியுள்ளது.
- இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:
மனித வளர்ச்சி குறியீட்டு எண் என்பது உலகளாவிய நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அளவீடு ஆகும். இது நல்வாழ்வை அளவிடும் ஒரு மேம்பட்ட நிலையான வழிமுறையாகும்.
இந்நிலையில், ஐ.நா. வெளியிட்டுள்ள 2022-2023-ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 193 நாடுகளில் இந்தியா 134-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா ஒரு இடம் முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. நார்வே 2வது இடமும், ஐஸ்லாந்து 3வது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர்.
- பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.
இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று [நவம்பர் 25] கொண்டாடப்படுவதை ஒட்டி ஐநாவின் பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு UNODC இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் காரணமாக உள்ளார். இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும். மேலும் 1 நிமிடத்திற்கு ஒருவர் கொலை என்றும் கணக்கில் உள்ளது.

அதற்கு முன் 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் இணையர் அல்லது குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும் சிறுமிகளும் இந்த தீவிரமான பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக ஆபத்தான இடம் அவர்களது வீடுதான் என்று ஐநா அறிக்கை நிறுவியுள்ளது.

இந்த குடும்ப கொலைகளில் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 21,700 பேர் தங்களது இணையர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது கணிசமான எண்ணிக்கை ஆகும். ஆப்பிரிக்காவில் 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் 100,000க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 100,000க்கு 1.5 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில் 100,000 பேருக்கு 0.8 பேர் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பேர் 0.6 பேர் என்ற விகிதங்களில் பெண்கள், குழந்தைகள் கொலையாகி உள்ளனர்.
மேலும் 2023 ஆம் ஆண்டில் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை ஆண்களை விடப் பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. இந்த கொலைகளுக்கு எதிரான =நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை குறைவதற்கு மாறாக அதிகரித்துக் கொண்டு இருப்பதாக ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.






