என் மலர்
நீங்கள் தேடியது "அனுமதி இல்லை"
- இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல
- முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது
பீகார் மாநிலம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் ஹிஜாப், புர்கா, நிகாப், முகமூடிகள் (Masks), ஸ்கார்ஃப் அல்லது ஹெல்மெட் அணிந்து முகம் மறைக்கப்பட்ட நிலையில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்ற புதிய விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இதை தெரிவிக்கும் வகையில், பீகாரின் பல பகுதிகளில் உள்ள நகைக் கடைகளின் வாசலில் "முகத்தை மறைத்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை"என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய நகைக்கடைகள் மற்றும் தங்கக் கூட்டமைப்பு அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நகைக் கடைகளில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டது என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல என்றும், முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது என்றும் AIJGF பீகார் தலைவர் அசோக் குமார் வர்மா தெரிவித்துள்ளார். இந்த முடிவிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மத சுதந்திரத்திற்கு எதிரானது என்று விமர்சித்துள்ளன
- மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.
- மண்டபங்களில் கடை போடுவதால் விற்பனை பாதிக்கப்பட்டு தொழிலை விட்டே சொல்லுமளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.
உடுமலை
மடத்துக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக (தீபாவளி வரை) ஜவுளிக்கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.இதற்கு வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மடத்துக்குளம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் துணிக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து மடத்துக்குளம் தாசில்தார் செல்வியை சந்தித்து மனு அளித்தனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.வணிக ரீதியான பொருட்களை மண்டபங்களில் வைத்து விற்பனை செய்வதற்கான அனுமதி எதுவும் இல்லாமல் சில வெளியூர் வியாபாரிகள் தீபாவளி சமயத்தில் கடைகள் அமைக்கின்றனர். இவர்கள் அரசுக்கான விற்பனை வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட எந்த வரியினங்களையும் செலுத்தாமல் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.இதனால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாதம்தோறும் வாடகை, ஆள் சம்பளம் உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்து வியாபாரிகள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்களில் நடைபெறும் விற்பனையை நம்பி காத்திருக்கின்றனர்.இதற்கென பெருமளவில் கொள்முதலும் செய்துள்ளனர்.ஆனால் மண்டபங்களில் கடை போடுவதால் விற்பனை பாதிக்கப்பட்டு தொழிலை விட்டே சொல்லுமளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.ஆண்டுதோறும் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.பேரூராட்சியில் முறையான அனுமதி பெற்று, ஜி.எஸ்.டி. பில் போட்டு கடை நடத்தினால் அவர்களும் வியாபாரி என்ற முறையில் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.எனவே மண்டபங்களில் தற்காலிக கடை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது'என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் கடை அமைப்பதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- திருவட்டார் பேருராட்சி சார்பாக அறிவிப்பு
- கும்பாபிஷேக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
திருவட்டார் ஆதிகேசவன் கோவில் கும்பாபிஷேக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மெயின் ரோட்டில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையில் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்க கூடாது என்று பக்தர்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கை ஏற்று பேருராட்சி சார்பாக அந்த பகுதியில் தற்காலிக கடைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டு உள்ளது.






