என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union minister giriraj singh"

    • VB-G RAM G திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயர்த்தப்படும்.
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA) திரும்பப் பெறப்பட்டு, பாராளுமன்றத்தில் VB-G RAM G சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பேராட்டம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் புதிய சட்டத்தில் ராம் பெயர் இருப்பதுதான் காங்கிரஸ்க்கு பிரச்சினை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    பீகார் மாநிலம் பெகுசாரை மக்களவை எம்.பி. தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ் சிங் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஏழை மக்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வேலைவாய்ப்பு அல்லது நிலத்திட்டம் குறித்து காங்கிரஸ் கவலைப்படுவதில்லை. அவர்களுடைய ஒரே பிரச்சினை கடவுள் ராமர் பெயரோடுதான். VB-G RAM G திட்டத்தில் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயர்த்தப்படும். காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சி காலத்தில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை.

    UPA ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு 10 வருடங்களில் மாநிலங்களுக்கு 2.13 லட்சம் கோடி ரூபாய் நிதி மட்டுமே ஒதுக்கியது. என்டிஏ அரசு 2014-ல் இருந்து மாநிலங்களுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் ஏழைகளுக்கு எதிரானது. கிராமப்புறங்களுக்கு எதிரானது.

    காங்கிரசின் உண்மையான முகம் மக்களுக்கு தெரியும். இதனால்தான் தேர்தலில் அவர்கள் மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.

    இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
      
    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், இந்த பாலியல் புகாரால் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    அவரது மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மஞ்சு வர்மா சரணடைந்தார். அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா மத்திய மந்திரியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பன்கேற்றது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவருக்கு பின்புறமாக மேடையின் முன்வரிசையில் மஞ்சு வர்மா அமர்ந்திருந்தார்.

    ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் பெண் மந்திரி மத்திய மந்திரி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ManjuVerma  
    ×