search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "express trains"

    • வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது.
    • சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தண்டவாளத்தில் வெள்ளம் வடியாததால் சென்னை சென்ட்ரலில் இருந்து 3-வது நாளாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. மின்சார ரெயில்கள் நேற்று மாலையில் இருந்து இயக்கப்படுகின்றன. பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது.

    எழும்பூர்-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் பெரம்பூர் வழியாக கடற்கரை நிலையம் மூலம் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்க ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகுதான் சென்ட்ரலில் இருந்து முழுமையாக ரெயில்கள் இயக்கப்படும். நாளை முதல் போக்குவரத்து சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்ட்ரல்-மைசூரு வந்த பாரத் ரெயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டன.

    திருப்பதி சப்தகிரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,

    பெங்களூரு-சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சோவை-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்ட்ரல் வந்தே பாரத், கோவை-சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இது தவிர மேலும் 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதே போல சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    • வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    வடக்கு மத்திய ெரயில்வேக்கு உட்பட்ட ஆக்ரா - மதுரா வழித்தடத்தில் யார்டு மறுவடிவமைப்பு பணி நடக்கிறது.இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    8 ெரயில்கள் வழித்தடம் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் (எண்:12645) 2024 ஜனவரி 6, 13, 20, 27 மற்றும், பிப்ரவரி 3 ந்தேதி, மறுமார்க்கமாக நிஜாமுதீன் - எர்ணாகுளம் ெரயில் (எண்:12646) ஜனவரி 9, 16, 23, 30 பிப்ரவரி 6ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    வைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16318) ஜனவரி 15, 22, 29, பிப்ரவரி 5-ந் தேதியும், மறுமார்க்கமாக கன்னியாகுமரி - கட்ரா ெரயில் (எண்:16317) ஜனவரி 12, 19, 26, பிப்ரவரி 2-ந் தேதி முழுவதும் ரத்தாகிறது.

    கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக பயணிக்கும் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) 2024 ஜனவரி 21, 28ந்தேதி, மறுமார்க்கமாக கோவை வருகையில் ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    திருவனந்தபுரம் - புதுடெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12625) ஜனவரி 27, பிப்ரவரி 3-ந்தேதி ரத்தாகிறது. திருவனந்தபுரம் திரும்பும் ெரயில் (எண்:12626) ஜனவரி 29, பிப்ரவரி 5-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.இத்துடன் சென்னை, மதுரை, நெல்லையில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் 38 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஸ்ரீரங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
    • சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு

    திருச்சி

    பூலோக வைகுண்டாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அதற்கு மறுநாள் முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி, வருகிற ஜனவரி 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை எழும்பூர்-மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற ஜனவரி 2-ந்தேதி நடைபெறவுள்ள சொர்க்கவாசல் திறப்பு நாளன்று பக்தர்களின் வசதிக்காக வண்டி எண்: 12635 சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் மாலை 6.08 மணி முதல் 6.10 மணி வரை நின்று செல்லும். வண்டி எண்: 12636 மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.38 மணி முதல் 9.40 மணி வரை நின்று செல்லும்.

    இதேபோல் வண்டி எண்: 16102 கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.38 மணி முதல் 9.40 மணி வரையிலும், வண்டி எண்: 16101 சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.18 மணி முதல் 9.20 மணவி வரையிலும் நின்று செல்லும். இந்த ரெயில்கள் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன
    • இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது

    நெல்லை:

    விழுப்புரம் ரெயில் நிலைய பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அந்த வழியாக நேற்றிரவு புறப்பட்டு வந்த ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

    சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன. அவை சிக்னல் கோளாறால் தாமதமாக புறப்பட்டன. இதனால் இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் 15 நிமிடங்கள் தாமதமாக 4 மணிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு இன்று காலை 6.45 மணிக்கு வரவேண்டிய நிலையில் 6 நிமிடங்கள் தாமதமாக 6.51-க்கு வந்து சேர்ந்தது.

    • நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கு வந்தடைந்தது.
    • தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    நெல்லை:

    தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு வடமாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில்கள் ஒரு சில நேரங்களில் சிக்னல் கோளாறு, பேரிடர் காலங்களில் சிறிது தாமதமாக ரெயில் நிலையங்களை வந்தடையும். அந்த வகையில் மதுரை கூடலூர் பகுதியில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வந்தடைந்தது.

    நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கும், தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    தினமும் அதிகாலை 5.50-க்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு வந்து சேரும். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 1.20 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கும், காலை 6.50-க்கு வந்து சேர வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக 8 மணிக்கும் வந்து சேர்ந்தது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் அவதிப்பட்டனர்.

    • சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    • ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் இருந்து வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வரும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    இதேபோல் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை ரெயில்வே என்ஜினீயர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

    இதையடுத்து அனைத்து ரெயில்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    குறித்த நேரத்திற்கு ரெயில்கள் வராததால் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும்.
    • இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம்.

    சென்னை:

    ரெயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பிளாட்பாரக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டது.

    இந்த உயர்வினை கைவிட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில் இப்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது.

    நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைந்தது 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும்.

    இதன் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள், மூத்த குடிமக்கள் பலரும் இந்த பெட்டிகளில் தான் பயணம் செய்வது வழக்கம்.

    ரெயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை ரெயில்வே வாரியம் குறைத்தது. அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு இயக்கப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 13-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது.

    இதன்மூலம் பெர்த்துகளின் எண்ணிக்கை 936-ல் இருந்து 780 ஆக குறைந்தது. பெர்த்துகள் குறைக்கப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் ரெயில்களில் சீட் கிடைக்காமல் அவதிக்கு ஆளானார்கள்.

    இதற்கான கண்டனத்தை ரெயில் பயணிகள் பதிவு செய்து வந்த நிலையில் இப்போது அடுத்த அதிரடியை ரெயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது. அதாவது குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை 2 ஆக குறைக்க திட்டமிட்டு உள்ளது.

    இதற்கு பதிலாக அதே ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. தற்போது ரெயில்களில் ஏ.சி. முதல் அடுக்கு, 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு பெட்டிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

    இதற்கு காரணம் இவற்றின் டிக்கெட் விலை தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டின் விலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்.

    உதாரணமாக நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் டிக்கெட் கட்டணம் ரூ. 225. இதுவே ஏ.சி. 3 அடுக்கு பெட்டியில் பயணிக்க ரூ. 650 ஆகும். இது 3 மடங்கு அதிகமாகும்.

    இந்த முடிவு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, சில ரெயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம், அதன் பிறகே இந்த முடிவு செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

    ரெயில் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ரெயில்வேயின் வருமானத்தை உயர்த்த வாரியம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் நின்று சென்ற சுமார் 13 ரயில்கள் கடந்த 2 ஆண்டுகளாக நின்று செல்வதில்லை.
    • பயணிகள் ரெயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட தீர்வு காணப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தனித்தனியாக ரெயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிபேச்சுவா ர்த்தையில் உறுதியளிக்க ப்பட்டதால் தற்காலிகமா நிறுத்திவை க்கப்பட்டுள்ளது.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் நின்று சென்ற விரைவு ரெயில்கள் உள்ளிட்ட சுமார் 13 ரயில்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நின்று செல்வதில்லை. இதனால் சீர்காழி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ}மாணவிகள் என அனைத்துதரப்பினரும் அவதியடைந்து வருகி ன்றனர்.

    இதனிடையே சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி ரெயில் பயணிகள் நல சங்கம் ஆகியன சார்பில் 29ம் தேதி சீர்காழி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஜூலை 9-ம் தேதி சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதனிடையே சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில், ரெயி ல்வேதுறை அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனி யாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் பாபு.கே.விஜயன் மற்றும் சங்க நிர்வாகிகள், ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் பங்கேற்றனர்.

    அதில் தற்போது பயணிகள் ரெயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திடவும் மூன்று மாத கால அவகாசம் கேட்டு கொண்டு தீர்வு காணப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் நகர வர்த்தக சங்கம், வர்த்தக பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் செந்தில்குமார், ரயில்வே துறையை சேர்ந்த சங்கர்குரு ஆகியோர் பங்கேற்று ஜூலை 7ம் தேதிக்குள் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின்பேரில் ஜூலை9ம் தேதி நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டமும் கைவிடப்பட்டது.

    அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #SouthernRailway
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம்-தக்கோலம் இடையே புதிய ரெயில் பாதையில் சிக்னல்கள் மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னை-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் காலை 7.25 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22625) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் டபுள் டெக்கர் அதிவிரைவு ரெயில் (22626) ஏப்ரல் 11,12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு சதாப்தி ரெயில் (12027) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பெங்களூருவில் காலை 6 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் சென்னை சதாப்தி அதிவிரைவு ரெயில் (12028) ஏப்ரல் 14-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.

    பெங்களூரு - சென்னை அதிவிரைவு ரெயில் (12608), காட்பாடி ஜங்‌ஷன் வரை இயக்கப்பட்டு, காட்பாடியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் மைசூர்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12610) காட்பாடியில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்தாகிறது.

    வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (17312) ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.

    ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (22679) ஏப்ரல் 6 மற்றும் 13-ந் தேதியில் ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும். அன்றைய தேதிகளில் ஜோலார்பேட்டையில் இருந்த சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படுகிறது.

    பெங்களூரு- சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில் (12640) ஏப்ரல் 14-ந் தேதி சோளிங்கர் வரை இயக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரத்து செய்யப்படும்.

    சென்னை சென்ட்ரல் - மைசூர் அதிவிரைவு ரெயில் (12609) சென்னை சென்ட்ரல் - சோளிங்கர் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.


    சென்னை சென்ட்ரல் - பெங்களூர் அதிவிரைவு ரெயில் (12607) சென்ட்ரல் - சோளிங்கர் இடையே ஏப்ரல் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல்- வாஸ்கோடகாமா விரைவு ரெயில் (17311) சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 5 மற்றும் 12-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி அதிவிரைவு ரெயில் (22698) சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே ஏப்ரல் 7 மற்றும் 14-ந் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.

    தனப்பூர்- பெங்களூரு இடையே இயக்கப்படும் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12296) ஏப்ரல் 12-ந்தேதி கூடூர்- சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்- காட்பாடி வழியாக இல்லாமல், கூடூர்- ரேணிகுண்டா- திருப்பதி- காட்பாடி வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு- தனப்பூர் சங்கமித்ரா அதிவிரைவு ரெயில் (12295) ஏப்ரல் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை காட்பாடி- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி திருப்பதி- கூடூர் வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு- தர்பாங்க் வரை இயக்கப்படும் பாக்மதி அதிவிரைவு ரெயில் (12578) ஏப்ரல் 13-ந் தேதி முதல் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் மார்க்கமாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயங்கும்.

    யஷ்வந்த்பூர் - கமாக்கியா அதிவிரைவு ரெயில் (12552) ஏப்ரல் 3 மற்றும் 10-ந் தேதியில் காட்பாடி- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழியாக இல்லாமல், காட்பாடி - திருப்பதி - கூடூர் வழியாக இயக்கப்படும்.

    பெங்களூரு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரெயில் (12658) ஏப்ரல் 13-ந் தேதி காட்பாடி- அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் மார்க்கமாக இல்லாமல் காட்பாடி- வேலூர்- திருவண்ணாமலை- விழுப்புரம்- எழும்பூர்- கடற்கரை வழியாக இயக்கப்படும்.

    நேரம் மாற்றியமைக்கப்படும் ரெயில்கள் விவரம்

    சென்னை சென்ட்ரல் - சாய்நகர் வாராந்திர ரெயில் (22601) ஏப்ரல் 10-ந் தேதி காலை 10.10 மணிக்கு பதிலாக பிற்பகல் 1.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

    யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரெயில் ஏப்ரல் 14-ந் தேதி காலை 11 மணிக்கு பதிலாக மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
    ×