என் மலர்
நீங்கள் தேடியது "Express trains"
- கடந்த 1-ந்தேதி முதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
- வருகிற 5-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும் படுக்கை வசதி பெட்டி 1 இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கோட்டை, தாம்பரம்-நாகர்கோவில், சென்டிரல்-திருவனந்தபுரம், சென்டிரல்-ஆழப்புலா, கோவை-ராமேசுவரம் ஆகிய ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.20681) ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (20682) ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி 2, படுக்கை வசதி கொண்ட பெட்டி 3, 2-வது வகுப்பு பொதுபெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்தும், நேற்று முதல் செங்கோட்டையில் இருந்தும் கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
* தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22657), ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22658) ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி 2, படுக்கை வசதி கொண்ட பெட்டி 3, 2-வது வகுப்பு பொதுபெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்தும், நேற்று முதல் நாகர்கோவிலில் இருந்தும் கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
* சென்னை சென்டிரலில் இருந்து ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22639), ஏப்ரல் 27-ந்தேதி வரையிலும், ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22640) ஏப்ரல் 28-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
* சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12695) இன்று (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12696) நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 1 தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
* கோவையில் இருந்து ராமேசுவரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16618) வருகிற 4-ந்தேதி முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரையிலும், ராமேசுவரத்தில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16617), வருகிற 5-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும் படுக்கை வசதி பெட்டி 1 இணைத்து இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவெறும்பூர் பகுதி பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம்.
- நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரெயில் இன்று முதல் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு புறப்பட்ட அந்த ரெயிலில் திருவெறும்பூரில் இருந்து திருச்சி எம்.பி. துரை வைகோ ஏறி தஞ்சையில் வந்து இறங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவெறும்பூர் பகுதி பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பலமுறை மத்திய ரெயில்வே அமைச்சர், ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தேன்.
அதன் பயனாக இன்று முதல் திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வந்து நடைமுறைக்கு வந்தது. இது திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த சிறப்பு ரெயில் போலவே அனைத்து அதிவிரைவு ரெயில்களும் திருவெறும்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன.
- தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 1 வது பிளாட்பாரத்தில் இருந்து 11-வது பிளாட்பாரம் வரை பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளது. எழும்பூர் பாரம்பரிய ரெயில் நிலைய கட்டிடத்தை தவிர மற்ற இடங்கள் சீரமைக்கப்படுகிறது.
விமான நிலையத்தை போல ரெயில் நிலையம் புதிதாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் செய்வதற்காக அங்கிருந்து புறப்படக்கூடிய ரெயில்களை மாற்றுவதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ரெயில்வே துறையின் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இந்த மூன்று பிளாட்பாரங்களில் சீரமைப்பு பணிகளை தொடங்க இருப்பதால் தாம்பரத்தில் இருந்து ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து இயக்கவும் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை இரண்டு மாதங்கள் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து 5 முக்கிய ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 2 மாதம் அங்கிருந்து இயக்கப்படும்.
எழும்பூரில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் ரெயில் எண் 22675 எக்ஸ்பிரஸ் வருகிற 11-ந்தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.
எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
இதே போல எழும்பூரில் இருந்து மும்பைக்கு செல்லக்கூடிய எண் 22158 எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.
ஏற்கனவே கொல்லம் எக்ஸ்பிரஸ், குருவாயூர், மன்னார்குடி எக்ஸ்பிரஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேலும் 6 ரெயில்கள் எழும்பூரில் இருந்து தாம்பரம் மற்றும் கடற்கரை நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ரெயில் இயக்க மாற்றத்தை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்படுகிறது.
- இந்த நடைமுறை தற்போது ராஜஸ்தானில் கடந்த 6-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை ரெயில்வே நிர்வாகம் தற்போது ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டு வருகிறது. இதனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள், ரெயில்களை பிடிக்க தொலைதூரத்தில் இருந்து வரும் பயணிகள் ரெயில்வே இறுதிப்பட்டியல் வெளியிடும் வரை தங்கள் டிக்கெட் நிலை குறித்து தெரியாமல் உள்ளனர்.
ரெயில் பயணிகளிடையே நிலவும் பதற்றத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பயணிகளுக்கு விரைந்து தகவல் செல்லும் வகையிலும் ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகளுடன் கூடிய பயணிகள் அட்டவணைகளை வெளியிடுவதற்கான வழிமுறையை ரெயில்வே உருவாக்கி வருகிறது.
இந்த நடைமுறை தற்போது ராஜஸ்தானில் கடந்த 6-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு காலை இயக்கப்படும் மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட ரெயில்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புதுச்சேரிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 66063) மெமு ரெயிலும், புதுவையிலிருந்து விழுப்புரத்துக்கு காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 66064) மெமு ரெயிலும் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்கு புதுவைக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 66051) வசதியான இடத்தில் வருகிற 8 மற்றும் 10-ந்தேதிகளில் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும். அதேபோல் புதுவை-திருப்பதி ரெயிலும் (வண்டி எண் 16112) வருகிற 11, 12-ந்தேதிகளில் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
புதுச்சேரி-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12868) வருகிற 11 மற்றும் 18-ந் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு பதிலாக 3.05 மணிக்கு (50 நிமிடம் தாமதமாக) புறப்படும்.
மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- செங்கோட்டை-சென்னை எழும்பூர் இடையே பொதிகை எக்ஸ்பிரசும் இருமார்க்கத்திலும் தினசரி இயக்கப்படுகின்றன.
- 2-ம் வகுப்பு பெட்டிகளை குறைக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.
நெல்லை:
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரைக்கு அடுத்தப்படியாக நெல்லை ரெயில் நிலையம் கோடிக்கணக்கில் வருவாயை கொட்டிக்கொடுக்கிறது.
தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளை தலைநகரான சென்னையுடன் இணைப்பதில் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நெல்லை சந்திப்பு-சென்னை எழும்பூர் இடையே நெல்லை எக்ஸ்பிரசும், செங்கோட்டை-சென்னை எழும்பூர் இடையே பொதிகை எக்ஸ்பிரசும் இருமார்க்கத்திலும் தினசரி இயக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 22 பெட்டிகளை கொண்ட ரெயில்களாகும்.
இந்த ரெயில்கள் 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்-5, 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்-2 மற்றும் முதலாம் வகுப்பு ஏ.சி. பெட்டி-1 உள்பட 22 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் இந்த ரெயில்களில் இருக்கைகள் நிரம்பியே இருக்கும்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள் தலா 1 குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி-1 இணைக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானதுமே பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே 2-ம் வகுப்பு பெட்டிகளை ஒருபோதும் குறைக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று தென்னக ரெயில்வேயின் மதுரை போக்குவரத்துப் பிரிவு சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஆகஸ்ட் மாதம் ஏ.சி. மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகள் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
தற்போது உள்ளது போல் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரசின் பெட்டிகளில் அறிவிக்கப்பட்ட மாற்றம் அந்த அறிவிப்பின்படியே நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
- கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12665), வள்ளியூர்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் நிறுத்தப்படும்.
சென்னை:
திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை எழும்பூரில் இருந்து வரும் 24-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), சாலக்குடி-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சாலக்குடியில் நிறுத்தப்படும்.
* மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வரும் ஜூன் 9-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12665), வள்ளியூர்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் நிறுத்தப்படும்.
* தாம்பரத்தில் இருந்து வரும் ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691), நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்.
*மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20692), நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.
* திருச்சியில் இருந்து வரும் ஜூன் 11-ந்தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22627), நெல்லை-திருவனந்தபுரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்.
* திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஜூன் 11-ந்தேதி காலை 11.35 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22628), திருவனந்தபுரம்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
* நாகர்கோவிலில் இருந்து வரும் ஜூன் 11-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321), நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து காலை 8.26 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கு வந்தடைந்தது.
- தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.
நெல்லை:
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு வடமாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரெயில்கள் ஒரு சில நேரங்களில் சிக்னல் கோளாறு, பேரிடர் காலங்களில் சிறிது தாமதமாக ரெயில் நிலையங்களை வந்தடையும். அந்த வகையில் மதுரை கூடலூர் பகுதியில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வந்தடைந்தது.
நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கும், தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.
தினமும் அதிகாலை 5.50-க்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு வந்து சேரும். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 1.20 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கும், காலை 6.50-க்கு வந்து சேர வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக 8 மணிக்கும் வந்து சேர்ந்தது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் அவதிப்பட்டனர்.
- சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன
- இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது
நெல்லை:
விழுப்புரம் ரெயில் நிலைய பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அந்த வழியாக நேற்றிரவு புறப்பட்டு வந்த ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன. அவை சிக்னல் கோளாறால் தாமதமாக புறப்பட்டன. இதனால் இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் 15 நிமிடங்கள் தாமதமாக 4 மணிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு இன்று காலை 6.45 மணிக்கு வரவேண்டிய நிலையில் 6 நிமிடங்கள் தாமதமாக 6.51-க்கு வந்து சேர்ந்தது.
- ஸ்ரீரங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு
திருச்சி
பூலோக வைகுண்டாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அதற்கு மறுநாள் முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி, வருகிற ஜனவரி 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை எழும்பூர்-மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற ஜனவரி 2-ந்தேதி நடைபெறவுள்ள சொர்க்கவாசல் திறப்பு நாளன்று பக்தர்களின் வசதிக்காக வண்டி எண்: 12635 சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் மாலை 6.08 மணி முதல் 6.10 மணி வரை நின்று செல்லும். வண்டி எண்: 12636 மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.38 மணி முதல் 9.40 மணி வரை நின்று செல்லும்.
இதேபோல் வண்டி எண்: 16102 கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.38 மணி முதல் 9.40 மணி வரையிலும், வண்டி எண்: 16101 சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.18 மணி முதல் 9.20 மணவி வரையிலும் நின்று செல்லும். இந்த ரெயில்கள் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பூர்:
வடக்கு மத்திய ெரயில்வேக்கு உட்பட்ட ஆக்ரா - மதுரா வழித்தடத்தில் யார்டு மறுவடிவமைப்பு பணி நடக்கிறது.இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
8 ெரயில்கள் வழித்தடம் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் (எண்:12645) 2024 ஜனவரி 6, 13, 20, 27 மற்றும், பிப்ரவரி 3 ந்தேதி, மறுமார்க்கமாக நிஜாமுதீன் - எர்ணாகுளம் ெரயில் (எண்:12646) ஜனவரி 9, 16, 23, 30 பிப்ரவரி 6ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
வைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16318) ஜனவரி 15, 22, 29, பிப்ரவரி 5-ந் தேதியும், மறுமார்க்கமாக கன்னியாகுமரி - கட்ரா ெரயில் (எண்:16317) ஜனவரி 12, 19, 26, பிப்ரவரி 2-ந் தேதி முழுவதும் ரத்தாகிறது.
கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக பயணிக்கும் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) 2024 ஜனவரி 21, 28ந்தேதி, மறுமார்க்கமாக கோவை வருகையில் ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம் - புதுடெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12625) ஜனவரி 27, பிப்ரவரி 3-ந்தேதி ரத்தாகிறது. திருவனந்தபுரம் திரும்பும் ெரயில் (எண்:12626) ஜனவரி 29, பிப்ரவரி 5-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.இத்துடன் சென்னை, மதுரை, நெல்லையில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் 38 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது.
- சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
சென்னை:
தண்டவாளத்தில் வெள்ளம் வடியாததால் சென்னை சென்ட்ரலில் இருந்து 3-வது நாளாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. மின்சார ரெயில்கள் நேற்று மாலையில் இருந்து இயக்கப்படுகின்றன. பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது.
எழும்பூர்-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் பெரம்பூர் வழியாக கடற்கரை நிலையம் மூலம் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்க ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகுதான் சென்ட்ரலில் இருந்து முழுமையாக ரெயில்கள் இயக்கப்படும். நாளை முதல் போக்குவரத்து சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சென்ட்ரல்-மைசூரு வந்த பாரத் ரெயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதி சப்தகிரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,
பெங்களூரு-சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சோவை-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்ட்ரல் வந்தே பாரத், கோவை-சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தவிர மேலும் 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதே போல சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.






