search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் சிக்னல் கோளாறு: நெல்லைக்கு தாமதமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
    X

    விழுப்புரத்தில் சிக்னல் கோளாறு: நெல்லைக்கு தாமதமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

    • சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன
    • இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது

    நெல்லை:

    விழுப்புரம் ரெயில் நிலைய பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அந்த வழியாக நேற்றிரவு புறப்பட்டு வந்த ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

    சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன. அவை சிக்னல் கோளாறால் தாமதமாக புறப்பட்டன. இதனால் இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் 15 நிமிடங்கள் தாமதமாக 4 மணிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு இன்று காலை 6.45 மணிக்கு வரவேண்டிய நிலையில் 6 நிமிடங்கள் தாமதமாக 6.51-க்கு வந்து சேர்ந்தது.

    Next Story
    ×