search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Signal failure"

    • திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தம்.
    • ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, ஜோத்பூர் நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

    சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    • வந்தே பாரத் ரெயில் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
    • ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை 20 நிமிடம் காலதாமதமானது.

    மேலும் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரெயிலும் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அதன் பின்னர் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

    இதனால் ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    தாதர் சாளுக்கியா, அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரெயில்கள் 40 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்தடுத்து பொதிகை எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன
    • இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது

    நெல்லை:

    விழுப்புரம் ரெயில் நிலைய பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அந்த வழியாக நேற்றிரவு புறப்பட்டு வந்த ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

    சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன. அவை சிக்னல் கோளாறால் தாமதமாக புறப்பட்டன. இதனால் இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் 15 நிமிடங்கள் தாமதமாக 4 மணிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு இன்று காலை 6.45 மணிக்கு வரவேண்டிய நிலையில் 6 நிமிடங்கள் தாமதமாக 6.51-க்கு வந்து சேர்ந்தது.

    ×