என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் நிறுத்தம்"
- வெள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. வெள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் விழுப்புரத்தில் இருந்து அரியலூர் வழியாக திருச்சி சென்ற பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 45 மணிநேரமாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தம்.
- ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஜோத்பூர் நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.






