என் மலர்
ஆசிரியர் தேர்வு
- டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.
- இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.
அகமதாபாத்:
இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைக்கக் காத்திருக்கிறது. அதாவது, தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் முதல் அணி என்பதோடு 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியை தொடர்ந்து மூன்றாவது ஐசிசி கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற இந்தியா போராடும்.
மறுபுறம் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, தனது முதல் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் 33 பந்துகளில் சதமடித்து மிரட்டியிருப்பதால், இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
- பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.
- ஜனாதிபதியை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை.
புதுடெல்லி:
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர் எனவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையே, ஜனாதிபதி வருகையின்போது அவரை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவை அனைத்தையும் நிகழ்ச்சியில் மேடையேறிய ஜனாதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதிலளித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
திரிணாமுல் காங்கிரஸ் அரசு உண்மையில் எல்லைகளை மீறிச் செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி அவமதிக்கப்பட்டதற்கு அவர்களது நிர்வாகமே பொறுப்பாகும். இது வெட்கக்கேடானது; பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்தின்மீது நம்பிக்கை பூண்டுள்ள ஒவ்வொருவரும் மனம் நொந்து போயுள்ளனர்.
பழங்குடியின சமூகப் பின்புலத்திலிருந்து வந்துள்ள ஜனாதிபதி முர்மு வெளிப்படுத்தியிருக்கும் வேதனையானது, இந்திய மக்களின் மனங்களிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் மாண்பு எப்போதுமே மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்திய திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தன. இந்த வரிசையில், நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது இயக்குநர் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் நடிக்கிறார்.
சமீபத்தில் அல்லு அர்ஜூன் குடும்ப திருமண விழா நடைபெற்றது. இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் அல்லு ஸ்னேகா ரெட்டி தம்பதி தங்களது 15-வது திருமண நாளை கொண்டாடினர்.
திருமண நாளை ஒட்டி நடிகர் அல்லு அர்ஜூன் தனது மனைவிக்கு ஆடம்பர மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. காரை பரிசளித்துள்ளார். இது தொடர்பாக அல்லு அர்ஜூன் தரப்பில் வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அல்லு அர்ஜூன் பரிசளித்துள்ள ஆடம்பர காரின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை இருக்கும் என்று தெரிகிறது.
- கூவத்தூரில் அம்மையார் சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகிவிட்டு,
- அந்த அம்மையாரை நோக்கியே, நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா? என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி.
ஓ. பன்னீர் செல்வம் சில தினங்களுக்கு முன்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தார். இன்று அவருடைய ஆதரவாளர்கள் திமுக-வில் இணையும் பிரமாண்ட விழா மதுரை திருமங்கலத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நீங்கள் மட்டுமல்ல, நானும் ரசிகன்தான். கழகம் எம்.ஜி.ஆரை வளர்த்தது. அவரும் கழகத்தை வளர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட தாய்க்கழகத்திற்கு- தாயின் மடிக்கு நீங்கள் எல்லாம் திரும்பி இருக்கிறீர்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க., யாருக்கோ அடிமை சேவகம் செய்யப்போனதால், உரிமைக்குரல் எழுப்பித் தாய்க்கழகத்திற்குத் திரும்பி இருக்கிறீர்கள். தடம் மாறாமல், திராவிடப் பாதையில் பயணத்தை தொடரும் உங்களை எல்லாம் நான் வருக… வருக… வருக என்று வரவேற்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள இயக்கம், அவரையும்- அவரது கொள்கைகளையும் மறந்து, துரோகத்தின் முழு உருவம் ஆனதால், பேரறிஞர் அண்ணா தொடங்கிய இயக்கத்திற்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். சுயமரியாதையின் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். அண்ணாவின் தம்பியாக- கலைஞரின் உடன்பிறப்பாக – உங்களை எல்லாம் வருக! வருக! என்று மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன்.
அமைதியும்- புன்னகையும் மட்டுமல்ல, ஓ.பி.எஸ். என்று சொன்னால், ஞாபகத்திற்கு வருகின்ற ஒரே சொல், விசுவாசம்!. மறைந்த அம்மையார் ஜெயலலிதா, தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில், நம்முடைய ஓ.பி.எஸ்.-ஐ இரண்டு முறை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை, எந்தத் துரோகமும் இல்லாமல், திருப்பி ஒப்படைத்த நேர்மைக்குச் சொந்தக்காரர்தான் ஓ.பி.எஸ்.. அதனால்தான், அம்மையார் ஜெயலலிதாவே, சகோதரர் ஓ.பி.எஸ்.-ஐ பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
விசுவாசத்துக்கு ஒரு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர்தான் பழனிசாமி அவர்கள். கூவத்தூரில், அம்மையார் சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகிவிட்டு, அந்த அம்மையாரை நோக்கியே, "நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா?" என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி. அவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று நம்முடைய சகோதரர் ஓ.பி.எஸ்.க்கு நன்றாகத் தெரியும்!
பழனிசாமி-யை பொறுத்தவரைக்கும், தன்னை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார். அவருடைய உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவாக்கி, அம்மையார் ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார் பழனிசாமி.
பழனிசாமி என்ன நினைக்கிறார் என்றால், பா.ஜ.க. தனக்கு நல்லது செய்யும் என்று நினைக்கிறார். உண்மையில், பா.ஜ.க. யாருக்கும் நல்லது செய்யாது! இன்றைக்குக் கூட செய்திகளில் பார்த்திருப்பீர்கள்... நாளைக்கு மகளிர் தினத்தை அடிப்படையாக வைத்து, இன்றைக்கு சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி, மகளிருக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.
- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.
- 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை நடத்திய நாடு இதுவரை சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. மேலும் எந்த அணியும் 3 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த 2 சாதனையும் படைக்கும் ஆர்வத்தில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் இதுவரை அதிகபட்சமாக தலா 2 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளன. தற்போது இந்தியா 3-வது தடவையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை நடப்பு சாம்பியன் இறுதிப்போட்டிக்கு வந்தது இல்லை. முதல் முறையாக இந்திய அணி அந்த பெருமையை பெற்றுள்ளது. 31-வது மோதல்
இரு அணிகளும் நாளை மோதுவது 31-வது போட்டியாகும். இதுவரை நடந்த முப்பது 20 ஓவரில் இந்தியா 18-ல், நியூசிலாந்து 11-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றது.
- ஜெயலலிதா இல்லாமலேயே 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது
- தனித்து நின்றாலே அதிமுகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும்.
கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.
பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில்,சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவும் கட்டிக் காத்த திராவிட இயக்கமான அதிமுகவை கரைய விட்டு விடாதீர்கள், காப்பாற்றுங்கள். தனித்து நின்றாலே அதிமுகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும்.
ஜெயலலிதா அம்மையார் இல்லாமலேயே 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதை முன்பே நான் கூறினேன். தற்போது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தால் அவரால் அந்த பதவியில் அமர முடியுமா? நிதீஷ்குமாரின் கதி எடப்பாடி பழனிசாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்தோனேசிய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
- அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் தளங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த இந்தோனேசிய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான புதிய அரசாணையில் அந்த நாட்டு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை மந்திரி மியுத்யா ஹபீத் கையெழுத்திட்டார்.
இந்த தடையின்படி, 16 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் யூடியூப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துக்கொள்ள முடியாது. அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் தளங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
- இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது.
காத்மண்டு:
நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.
பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.
தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.
ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
இதற்கிடையே, வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடந்தது. இதில் 160 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் அதிக இடங்களில் வென்று நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவரது வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் நாட்டின்மீது போர் தொடுத்தன.
- டிவி சேனல்கள் பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகளை வெளியிடுகின்றன.
புதுடெல்லி:
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் குறித்து சில டிவி சேனல்கள் டி.ஆர்.பி. மதிப்பீடுகளுக்காகத் தேவையற்ற பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகள் மற்றும் ஊடகத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், மக்களின் நலனுக்காக டிவி சேனல்களின் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகளை 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- எம்.எல்.எஸ். கோப்பை வென்ற மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி வெள்ளை மாளிகைக்கு சென்றது.
- லயோனல் மெஸ்சி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் நிற கால்பந்து, எண் 47 கொண்ட ஜெர்சியை பரிசளித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடந்த மாஸ்டர் லீக் சாக்கர் எனும் கால்பந்து தொடரில் லயோனல் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி
முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதற்கிடையே, முதல் முறையாக எம்.எல்.எஸ். கோப்பை வென்ற மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து கவுரவித்தார். அப்போது, லயோனல் மெஸ்சி அதிபர் டிரம்ப்பிற்கு பிங்க் நிற கால்பந்தினையும், எண் 47 கொண்ட ஜெர்சியும் பரிசாக அளித்தார். அங்கு அதிபர் டிரம்ப் பேசியதாவது:
இதுவரை எந்த ஓர் அமெரிக்க அதிபருக்கும் கிடைக்காத ஒரு தனித்துவமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு வருக, லயோனல் மெஸ்சி.
இன்று எனது மகன் என்னிடம் யார் வருகிறார் என்று தெரியுமா கேட்டான்? எனக்கு நிறைய வேலை இருப்பதால் தெரியவில்லை என்றேன். அவன், மெஸ்சி எனக் கூறினான். அவன் கால்பந்தின் மிகப்பெரிய ரசிகன். உங்களது தீவிரமான ரசிகன்.
ரொனால்டோவும் சிறந்த வீரர். நீங்களும் சிறந்தவர். சிறந்தவர் மெஸ்சியா அல்லது பீலேவா? பீலேவை விட மெஸ்சி சிறந்தவர் என தெரிவித்தார்.
திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சந்தானம் நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. K7 ஸ்டூடியோஸ் சார்பில் விஜய் கே செல்லையா மற்றும் வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். இந்தப் படம் டைம் லூப் சார்ந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சுதமான் கிருஷ்ணா எழுதி, இயக்கும் இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு பணிகளை ரிச்சர்ட் எம் நாதன் மேற்கொள்ள பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை ஜேக்சன் மேற்கொள்ள திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி அளிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
- எங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் தயங்கமாட்டோம்.
- பிராந்தியத்தில் அமைதி திரும்ப உறுதி பூண்டுள்ளோம்.
அமெரிக்கா- இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரில் ஈரானை வீழ்த்தாமல் விடமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சபதம் ஏற்றுள்ளார். அதேவேளையில் பதிலடி கொடுப்போம் என அஞ்சாமல் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதுவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஒரு சில தினங்களுக்கு முன் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. அது மிகவும் காலதாமதமானது என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை குறித்த மத்தியஸ்தம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் கூறுகையில் "இது தெளிவாக இருக்கட்டும். பிராந்தியத்தில் அமைதிய நிலவ நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஆனால், எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதில் நாங்கள் தயங்கமாட்டோம். ஈரான் மக்களை குறைத்து மதிப்பிட்டு, இந்த மோதலை யார் தூண்டினார்களோ, அவர்களை நோக்கி மத்தியஸ்தம் இருக்கம் வேண்டும்" என்றார்.
இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகள் போர் நிறுத்தத்திற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.






