என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு கேடு கெட்ட பணநாயகம் வலுவாக வேரூன்றி விடுகிறது.
- பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது என தடைபோடப்பட்டுள்ளது. ஆனால் சினிமா பற்றி பேசலாம்.
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'டெக்ஸ்லா' படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது. விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காசு கொடுத்து வாக்குகளை பெறுவதை நாங்கள் இழிவான அரசியல் என்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேட்கும் நிலையில் இருக்கிறது. நல்ல ஆட்சி கொடுத்துவிட்டால் வாக்குக்கு காசு ஏன் கொடுக்க வேண்டிய நிலை உருவாகுது?
வாக்குக்காக வேட்பாளர் ரூ.15 கோடி முதலீடு செய்கிறார் என்றால் அது மக்கள் சேவைக்காகவா? அவரது லாப தேவைக்கா? முதலீடு செய்யும் போது அவர் முதலாளி ஆகி விடுகிறார். அந்த இடத்தில் மக்கள் சேவை செத்து போய் விடுகிறது.
ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு கேடு கெட்ட பணநாயகம் வலுவாக வேரூன்றி விடுகிறது. பணம் இருக்கிறவன் தான் அதிகாரத்துக்கு வர முடியும் என்றால் முதலாளிகளுக்கான அதிகாரம் உருவாக்கப்படுமே தவிர உழைக்கும் மக்களுக்கான அரசியலோ, அதிகாரமோ இந்த நிலத்தில் இருக்காது.
நல்ல ஆட்சி என்பது வெறும் சொல்லில் தான் உள்ளது. செயலில் இல்லை. எனக்கு ஓட்டு போட்டார்கள். உங்களுக்கு ஓட்டு போட்டார்களா? வாங்கினீர்களா?
பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது என தடைபோடப்பட்டுள்ளது. ஆனால் சினிமா பற்றி பேசலாம். இறைவழிபாட்டை தூற்றி திரைவழிபாட்டை போற்றுகிறீர்கள். கடவுள் வழிபாட்டை விட கதாநாயகன் வழிபாடு மேன்மை என்கிறார்கள். அரசு விழாக்களுக்கு அறிஞர்களோ, சான்றோர்களோ, கல்வியாளர்களோ கலந்து கொள்வதில்லை. திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் செல்கிறார்கள்.
கல்லூரி விழாக்களில் திரைப்பட நடிகர்களை அழைத்து வருகிறார்கள். சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு ஆடுகிறார்கள். சினிமா ஒரு பெரிய மதமாக மாறிவிட்டது. கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சினிமா இல்லையா? அங்கு சினிமா துறையினர் ஆளமுடியவில்லையே? என்.டி.ராமாராவ் வந்தது விபத்து. தமிழ்நாட்டை போல் திரைக்கவர்ச்சியில் மூழ்கிய மாநிலமாக எந்த மாநிலமும் கிடையாது என்று கூறினார்.
- அகாடமியில் படித்து இதுவரையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர்.
- ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள் 2,106 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களுக்கான (டெட்) ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 9-ந்தேதி முதல் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அகாடமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
பணிபுரியும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2026-ம் ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்.18-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாடமியில் படித்து இதுவரையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர்.
டெட் தேர்வில் 2,106 பேர் தேர்ச்சி பெற்று சாதனை
சமீபத்தில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள் 2,106 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அதேபோல, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 500க்கும் மேற்பட்டோர் இந்த அகாடமியில் படித்து வெற்றி பெற்று பணி நியமன ஆணைகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
இந்நிலையில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற மார்ச் 9-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும். அதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
முன்பதிவு செய்க
இந்த பயிற்சி வகுப்பில் சேர, 'TNTET -2026: ONLINE COACHING FOR WORKING TEACHERS' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியை 7550151584-என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்!
- திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்...
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் 'மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்!
திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும்! என்று கூறியுள்ளார்.
- ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.
- ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது.
காபூல்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு முறை சூப்பர் ஓவரில் போராடி தோற்றது கவனிக்கத்தக்க ஒரு ஆட்டமாக இருந்தது.
இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக ரஷித் கானை கேப்டன் பதவியில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக தொடக்க வரிசை பேட்ஸ்மேன் இப்ராகிம் ஜட்ரன் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒரு வீரராக ரஷித் கான் அணியில் நீடிக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.
ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடக்கிறது. ஆனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால் இந்த தொடர் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளது.
- ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
- இப்படத்தின் பூஜை விழாவில் ரவி மோகன், யோகி பாபு, கெனிஷா பிரான்சிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் 'ரவி மோகன் ஸ்டூடியோல்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதன் முறையாக ஒரு படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதன்பின் படம் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், தான் தயாரிக்கும் படத்தில் இயக்குநராக நடிகர் ரவி மோகன் உருவெடுத்துள்ளார். அப்படத்திற்கு 'ஆன் ஆர்டினரி மேன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றன.

'ஆன் ஆர்டினரி மேன்' படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை விழாவில் ரவி மோகன், யோகி பாபு, கெனிஷா பிரான்சிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே நடிகர் ரவி மோகனின் தயாரிப்பில் 'ப்ரோ கோட்' எனும் மற்றொரு படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜூன், அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானியர்கள் அங்கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கல்வி விசா பெற்று இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டு, பின்னர் அங்கேயே தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக அந்நாட்டு உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானியர்கள் அங்கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்திருத்தம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
- புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.
- தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு கேரள ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் டெல்லியில் உள்ள லோக்பவனில் நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் 3.5 ஆண்டுகள் பதவியில் இருந்தநிலையில் இன்று திடீரென ராஜினாமா செய்தார்.
திடீர் ராஜினாமா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "ஆளுநர் அலுவலகத்தில் நான் போதுமான நேரத்தைச் செலவிட்டுவிட்டேன்" என பதிலளித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த போஸின் ராஜினாமாவை தொடர்ந்து, மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா செய்தி எனக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் எனக்கு தெரியவில்லை. மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் நியமனம் குறித்து உள்துறை அமைச்சகம் மரபுகளின்படி என்னிடம் முறையாக தெரிவிக்கவில்லை. சட்டமன்ற தேர்தலையொட்டி உள்துறை அமைச்சகம் தந்த அழுத்தத்தால் போஸ் ராஜினாமா செய்திருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆனந்த போஸ் மம்தா பானர்ஜி அரசு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மாற்றப்பட்டுள்ளார்.
- அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி 2021 செப்டம்பர் 18-ம் தேதியிலிருந்து இன்றுவரை பதவி வகித்து வந்தார்.
கேரள ஆளுநரான ராஜேந்திர அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பதவி வகிப்பார். இந்த மாற்றங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 42 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 43 ரன்னும், இஷான் கிஷன் 39 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெத்தேல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் தனி ஆளாகப் போராடினார். வில் ஜாக்ஸ் 35 ரன்னும், ஜாஸ் பட்லர் 25 ரன்னும் எடுத்தனர்.
பெத்தேல் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
- அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானம் புறப்பட்டது.
- சுமார் 7.42 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியானது.
கவுகாத்தி:
இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வருகிறது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
- இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சேர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் 700க்கும் அதிகமானோர் ஈரானில் கொல்லப்பட்டனர்.
ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக தாக்குதல் வருகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 77 கொல்லப்பட்டனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனான் சுகாதார அமைச்சர் கூறுகையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 7 குழந்தைகள் அடங்குவர். சுமார் 527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் ஹிஸ்புல்லாவை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) தெற்கு லெபனானில் உள்ள நபதியே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானில் இருந்து இதுவரை சுமார் 83,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரே காரில் வந்த இருவரும், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்துவந்ததும் கவனம் ஈர்த்துவருகிறது.
- நடிகை ஒருவருடன் உடனான தகாத உறவே விவாகரத்திற்கு காரணம்
AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் மாலை திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஒரே காரில் வந்த இருவரும், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்துவந்ததும் கவனம் ஈர்த்துவருகிறது. கடந்தவாரம் விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்துக்கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நடிகை ஒருவருடன் உடனான தகாத உறவே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவாகரத்திற்கு நடிகை த்ரிஷாவுடனான தொடர்புதான் காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக விழாவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






