என் மலர்
ஆசிரியர் தேர்வு
- சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டது.
தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி. இவர் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.
இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆளுநர், குஷ்புவை ஆபாசமாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
- தேர்தல் கமிஷனர் குழு முதல் முதலாக அசாமில் ஆய்வை மேற்கொண்டது.
- 5 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வை மறு ஆய்வு செய்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது.
மேற்கு வங்காளம் மாநிலத்தின் சட்டசபை மே 7-ந் தேதியும், தமிழக சட்டசபை மே 10-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந் தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் நிறைவு பெறுகிறது. புதுச்சேரி சட்டசபையில் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந் தேதி முடிவடைகிறது.
இதனால் இந்த 5 மாநிலங்களுக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் கமிஷன் முனைப்போடு பணியாற்றி வருகிறது.
மாநில பொதுத்தேர்தல்களை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தனது குழுவினரோடு சென்று அந்தந்த மாநிலங்களில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் நடத்துவதற்கு தகுந்த நாட்களை ஆய்வு செய்வது வழக்கம்.
அங்கு தேர்தல் நடத்தும் சமயத்தில் உள்ளூர் விடுமுறைகள், பாரம்பரிய கலாசார விழாக்கள் ஏதேனும் இருக்கிறதா?, தேர்வுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? என்பதை எல்லாம் அவர்கள் ஆய்வு செய்வார்கள்.
இதன்படி மேற்கண்ட 5 மாநில தேர்தல் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கமிஷனர் குழு முதல் முதலாக அசாமில் ஆய்வை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு நடத்தியது.
இந்தநிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கேரளாவிலும், 9 மற்றும் 10-ந் தேதிகளில் மேற்கு வங்காளத்திலும் ஆய்வை நடத்துகிறது.
இந்த ஆய்வுகளில் தேர்தல் கமிஷன் குழுவினரோடு பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், அமலாக்க நிறுவனத் தலைவர்கள், போலீஸ் உயரதிகாரிகள், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
இவர்களுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் டெல்லி சென்று, 5 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வை மறு ஆய்வு செய்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வார்.
இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு 10-ந்தேதிக்கு பிறகு எந்த நேரத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வருகிற 13-ந் தேதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. துபாய் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு காரணங்களால் பயணம் செய்தவர்கள், வான்வெளி மூடப்பட்டுள்ளதால் இருந்து திரும்ப முடியாமல் பலர் சிக்கித் தவிக்கின்றனர். போர் சூழல் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் செய்வதறியா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போர் காரணமாக துபாயில் சிக்கித்தவிப்பவர்களுக்கு பிரபல நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், துபாயில் தங்க இடமின்றி தவிப்பவர்கள் தன்னை தொடர்பு கொண்டால், பாதுகாப்பான தங்குமிட வசதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த X தளப் பதிவில் அவர், "போர் காரணமாக பல பயணிகள் துபாயில் சிக்கித் தவிக்கின்றனர். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ தங்குவதற்கு இடம் இல்லையென்றால், நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை இலவசமாக வழங்குகிறோம்.
தேச பேதம் கிடையாது, நிபந்தனைகள் இல்லை. மனிதாபிமானம் மட்டும் போதும். உதவி தேவைப்பட்டால் இன்ஸ்டாகிராமில் @dugastaproperties எங்களுக்கு DM அனுப்புங்கள். தேவைப்படும் ஒருவரைச் சென்றடைய இதைப் பகிரவும்," என குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து பல நாடுகளில் வான்வெளி மூடப்பட்டு விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை மத்திய கிழக்கு மற்றும் குறிப்பிட்ட சர்வதேச இடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
"மத்திய கிழக்கு மற்றும் குறிப்பிட்ட சர்வதேச இடங்களுக்கு பிப்ரவரி 28 முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எங்கள் செயல்பாட்டுக் குழுக்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் பிராந்திய முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றன, விமான அட்டவணைகளை மறுசீரமைக்கின்றன. மேலும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தியா மற்றும் அந்தந்த சர்வதேச அதிகார வரம்புகளில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளைத் திட்டமிடுகின்றன," என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்திய விமான நிறுவனங்களின் 1,221 விமானங்களும், வெளிநாட்டு விமான நிறுவனங்களின் 388 விமானங்களும் (மார்ச் 3 வரை) ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சக வலைத்தளத்தின்படி, மார்ச் 3-ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை 356 ஆகும், அதே நேரத்தில் 338 சர்வதேச விமானங்கள் நாட்டின் பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் தரையிறங்கின.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது கழுத்தில் ஏற்பட்ட சிவப்பு சொறிக்கு தடுப்பு நோக்கிலான சரும சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த உடல்நிலை குறித்து மேலும் எந்த விவரங்களையும் பகிர வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
கடந்த திங்கள்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற 'மெடல் ஆஃப் ஹானர்' விருது வழங்கும் விழாவில் டிரம்ப் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவரது கழுத்தின் வலது பக்கத்தில் –காலர் அருகே சிவப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாகப் பரவிய சொறி தெளிவாகத் தெரிந்தது.
புகைப்படங்கள் வேகமாக பரவிய நிலையில் விழாவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில், வெள்ளை மாளிகை மருத்துவர் டாக்டர் ஷான் பார்பரெல்லா, "அதிபர் ஒரு பொதுவான கிரீமை தோல் சிகிச்சையாகப் பயன்படுத்தி வருகிறார். இந்த சிகிச்சை ஒரு வாரம் மட்டுமே நீடிக்கும். சிவப்பு நிறம் இரண்டு-மூன்று வாரங்கள் வரை தொடரலாம்" என்று தெரிவித்தார்.
புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட், "மருத்துவரின் அறிக்கையில் கூறப்பட்டதைத் தவிர வேறு எந்தத் தகவலும் என்னிடம் இல்லை" என்று சுருக்கமாக பதிலளித்தார்.
79 வயதான டிரம்பின் உடல்நிலை அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது கைகளில் அவ்வப்போது தென்படும் காயங்கள், கால்களில் ஏற்படும் வீக்கம் ஆகியவை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ஜனவரி மாதத்தில் கைகளில் காயங்கள் தெரிந்தபோது, டிரம்ப் தானே "அடிக்கடி ஆஸ்பிரின் உட்கொள்வதால் ஏற்படுகிறது" என்று விளக்கினார்.
கடந்த ஜூலை மாதம் கணுக்கால்கள் வீங்கியிருந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், "நாள்பட்ட நரம்பு இரத்த ஓட்டக் குறைபாடு (Chronic Venous Insufficiency)" இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவர் அறிவித்தார். இது 70 வயதுக்கு மேற்பட்டோரிடையே மிகவும் பொதுவான, ஆபத்தற்ற நிலை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றபோது அமெரிக்க வரலாற்றிலேயே மிக வயதான தலைவராக (78) பொறுப்பேற்ற டிரம்ப், தனது உடல்நிலையை முன்னாள் ஜனநாயகக் கட்சி அதிபர் ஜோ பைடனுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பேசி வருகிறார்.
- இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது.
- சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரு அணிகளும் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இதே மும்பை மைதானத்தில் மோதின. இதில் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
நடப்பு தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 72 ரன்னில் வீழ்ந்தது. அதற்கு பிறகு நெருக்கடியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பெற்றது. லீக் ஆட்டங்களில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் நல்ல நிலைக்கு திரும்பியது அணிக்கு கூடுதல் பலம்.
அபிஷேக் சர்மாவின் பேட்டிங் கவலையை ஏற்படுத்துகிறது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் (231 ரன்), இஷான் கிஷன் (224), திலக் வர்மா (178 ரன்), ஷிவம் துபே (166) ஆகியோர் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் பும்ரா (9 விக்கெட்), வருண் சக்கரவர்த்தி (12 விக்கெட்) ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் பணியில் (172 ரன், 6 விக்கெட்) சிறப்பாக செயல்படுகிறார்.
இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
இங்கிலாந்து எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்பதால் இந்திய வீரர்கள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவது அவசியம்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரி புரூக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 1 சதம், 1 அரை சதத்துடன் 228 ரன்கள் எடுத்துள்ளார். வில் ஜேக்ஸ், பெத்தல், பான்டன், பில் சால்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
பந்துவீச்சில் அதில் ரஷீத் (11 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர், டாசன் (தலா 10 விக்கெட்) ஓவர்டன் (9), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
லீக் சுற்றில் தடுமாறிய இங்கிலாந்து அணி அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடமுடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரையிறுதியில் ஆடுகிறது.
இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் மல்லு கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் ஏற்படாது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா:
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது.
யான்சென் அதிரடியாக ஆடி 30 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 55 ரன்கள் குவித்தார். பிரேவிஸ் 34 ரன்னும், ஸ்டப்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்ரி , மெக்கன்சி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினர்.
முதல் விக்கெட்டுக்கு பின் ஆலன்டிம் சைபர்ட் ஜோடி 117 ரன்கள் சேர்த்த நிலையில் டிம் சைபர்ட் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் ஆலன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 33 பந்துகளில் 8 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் நியூசிலாந்து 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
- காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தவெக உடன் கூட்டணி இல்லை என்பது தெளிவானது.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணியில் இணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு, கனிமொழி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. நாளை முதலமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திவ்யா தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
திமுகவில் இணைந்துள்ள நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அவ்வகையில் திவ்யா சத்யராஜ் அண்மையில் அவரிடம் 2 கேள்விகளை கேட்டிருந்தார். ஒன்று, அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? அடுத்த கேள்வி நீங்கள் கொள்கை தலைவராக பெரியாரை வைத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பெண்களை இப்படி தப்பா பேசுறாங்க, இதை சகித்துக்கொள்ள முடியாது என்று பேசியிருந்தார். திவ்யாவின் கேள்விகளுக்கு த.வெ.க தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், விஜயின் தீவிர ரசிகரான சிபி சத்யராஜ் தனது அப்பா நடித்த அரசியல் படமான அமைதிப்படை படத்தின் காட்சியை பகிர்ந்து தனது சகோதரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், அமைதிப்படை படத்தில் மணிவண்ணனிடம் பேசும் சத்யராஜ், 'மணியா வரலாறை தெரிஞ்சுக்க' என வசனத்தை வைத்து விட்டு விஜய் இதுவரை செய்த உதவிகள் தொடர்பான வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.
- ஈரான் மீது கடந்த சனிக்கிழமை காலை அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதலை தொடங்கியது.
- இன்று 5-வது நாளாகவும் தாக்குதல் தொடர்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் சவுதி அரேபியா, யுஏஇ, பஹ்ரைன், குவைத் போன்ற வளைகுடா நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் இருந்து தாக்குதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த போர் வாரங்களை கடக்கும் என அஞ்சப்படுகிறது.
இன்று துருக்கி மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. துருக்கி நேட்டோ படையில் இருப்பதால் நேட்டோ வான்பாதுகாப்பு மூலம் ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அளித்துள்ளது.
இன்று 5-வது நாளாக ஈரான் மீது தாக்குதல் தொடரும் நிலையில், அந்நாட்டில் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது வரை 1045 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்பு, கடற்படை, ஆயுதங்களை அழித்து விட்டதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார். ஆனால் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ஈரான் விளைகுடா நாடுகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
- பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார்.
- நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
அதே சமயம் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
- இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!
- நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!
"கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்" எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.
'தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.
அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! எனக் கூறியுள்ளார்.






