Israel Attack: லெபனானில் 77 பேர் உயிரிழப்பு.. 500-க்கும் மேற்பட்டோர் காயம்

527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு லெபனானின் Tyre நகரில் Solar farm  மீது நடந்த இஸ்ரேல் தாக்குதல்  
தெற்கு லெபனானின் Tyre நகரில் Solar farm மீது நடந்த இஸ்ரேல் தாக்குதல்  
Published on

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சேர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் 700க்கும் அதிகமானோர் ஈரானில் கொல்லப்பட்டனர்.

ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக தாக்குதல் வருகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 77 கொல்லப்பட்டனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லெபனான் சுகாதார அமைச்சர் கூறுகையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 7 குழந்தைகள் அடங்குவர். சுமார் 527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் ஹிஸ்புல்லாவை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) தெற்கு லெபனானில் உள்ள நபதியே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானில் இருந்து இதுவரை சுமார் 83,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com